Translate this blog to any language

சனி, 17 பிப்ரவரி, 2024

பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?"

சங்கீகளும், நாதக தற்குறி சகோதரர்களும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி... 

"பெரியார் தான் 
தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு இருந்தேன்.

"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்
'ஆமாம் பெரியார் தான் எல்லாம் பண்ணார்!'

வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர் தான் 
நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.

- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.
- 2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க?.. கடவுளை நம்புறவன் முட்டாள்னு சொல்ல ஒரு Guts வேணும்.. ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..

- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 20 வருஷம் முன்னாடி இருந்தே, வகுப்புவாரி
இடஒதுக்கீடு வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, "சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்...? இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா,
எனக்கு காங்கிரஸே வேணாம்"னு சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.

- காங்கிரஸை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, ஜாதி தான் எதிரி... ஜாதியை தூக்கி பிடிக்குற வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும்,
மூடநம்பிக்கைகளையும் வாழ்க்கை முழுக்க தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.

- 1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார்.
1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட தாளமுத்து நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.

- இந்தியாவிலேயே பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே
'சுயமரியாதை இயக்கம்' மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு! இன்னைக்கு வரை, ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்க இல்ல? அதுக்கு காரணம், பெரியார் இல்லாம வேற யாரு?

👉- தமிழ் மொழியை எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்...

15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை முன்மொழிந்தார் #பெரியார். அவரோட இந்த மொழி சீர்திருத்தத்தை அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.

- கடந்த 100 வருஷத்துல பெரியார் அளவுக்கு பெண்களுக்காக பேசுன ஒரு தலைவர், இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராவும், குழந்தை திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர் பெரியார். விதவை மறுமணத்தோட அவசியம் பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும்,
பெண்களுக்கு சொத்துல உரிமை வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.

இன்னைக்கு நாம பேசுறோமே.. பொண்ணுங்களோட financial independence, பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்ன்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார்.
- பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார்.

- ஒரு முறை காந்திஜி அவர்கள் "தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட
எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. "நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல. அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு, சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.
- 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை தேடி வந்தது... அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ, 'வேணாம், எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு பெரியார் சொல்லிட்டார்...
💕🎊💕🎊💕

Courtesy:
From Facebook 
பகிர்வு - Peer Raja

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

ஆரிய பார்ப்பன பாஜக தமிழகத்துக்கு ஆபத்து!!

நமது தமிழ் இளைஞர்கள், பொதுவாகவே திமுக ஊழல் செய்கிறது, அண்ணா திமுக ஊழல் செய்கிறது என்று யாராவது மனோவசியம் செய்தால் ஏமாந்து விடுகிறார்கள்!

ஏதோ பிற உலக கட்சிகள், இந்திய கட்சிகள் ஒரு ஊழலும் செய்யாத உத்தமர்கள் போல! சொல்லப்போனால் இந்தியாவிலேயே அதிக தொகைகளுக்கு பல லட்சம் கோடி ஊழல் செய்த கட்சி ஆரிய பார்ப்பன பாஜக கட்சி தான்!

சரி, நான் திராவிட இயக்கங்களை போற்றுபவன்! அதற்கு என்ன காரணம் என்று சொல்கிறேன்!

திராவிட இயக்கம் என்னதான் ஊழல் செய்தாலும் நான் வந்து 70% திமுக 30% அதிமுக, அதன் பிறகு எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர் திருமா அவர்களின் கொள்கை பிடிப்பு ரொம்ப பிடிக்கும்!

பாஜக என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஆர்எஸ்எஸ் ஆரம்பித்த ஒரு அமைப்பு!

நமது சூத்திரப் பிள்ளைகளின் கல்வி உரிமையை ஒழித்து நம்மை பழையபடி சனாதன (அ)தர்ம சாக்கடையில் ஆழ்த்தி பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள்...
பிற 97% மக்கள் தாழ்ந்தவர்கள் 
என்ற ஆரிய பார்ப்பன ஜாதீய கருத்தை நிலை நிறுத்தத் துடிப்பவர்கள்!

அதனால் எனக்கு பாஜக அறவே பிடிக்காது!

இன்னொன்று
பற்பல துறைகளில்
360°
மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான்!

உலகத்திலேயே அதிக உயர் கல்வி படித்தவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்! அதற்கு காரணம் தொடர்ந்து வந்த இரண்டு திராவிட இயக்க ஆட்சிகள் தாம்!

அதற்கு மூல காரணம் தேடித் தேடி குழந்தைகளை ஊக்குவித்து, பள்ளிப்படிப்பு கல்லூரி படிப்பு வேலைவாய்ப்பு என்றெல்லாம் சூத்திர குழந்தைகளை உயரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் பெரியார் அண்ணா அம்பேத்கர் கொள்கைகள் தாம்!

அதனால் தான் வடமாநிலங்கள் நம்மை விட நூறு வருடம் பின்தங்கி இருக்கின்றன! இன்னும் கூட அங்க சராசரி பொதுமக்களுக்கு கக்கூஸ் கட்டவில்லை!

வடக்கிலிருந்து இளைஞர்கள் பாஜக காங்கிரஸ் ஆட்சியில் சிக்கி சீரழிந்து படிப்பும் இல்லாமல் வேலையும் இல்லாமல் தமிழ்நாட்டை நோக்கி கோடிக்கணக்கில் வந்து கூலி வேலை செய்து பிழைப்பது ஏன்?

ஏன் அவர்களுக்கு உயர்கல்வி இல்லை வேலை வாய்ப்பு இல்லை அங்கேயே வாழ்வதற்கு வசதி இல்லை? 

சுதந்திரம் பெற்று ஒரே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரித்து, மாநில வளர்ச்சிக்கு அவர்களே பட்ஜெட்டில் அதிகம் கொள்ளையடித்துக் கொண்ட போதும் அந்த வட இந்திய மாநிலங்கள் ஏன் வளர்ச்சி அடையவில்லை!

அங்குதானே இவர்கள் போற்றுகின்ற வட இந்திய பெருந்தலைவர்கள் பலரும் பிறந்தார்கள்? 

ஆக, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இன்று வரை வாயில் வடை சுட்டு திராவிடத்தை திட்டிக்கொண்டு பிழைத்து வருகிறார்கள் என்பது மட்டுமே தெள்ளத்தெளிவான உண்மை!

சரி! ஊழல் என்பது உலக நாடுகளில் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது! தேன் எடுப்பவன் தன் கையை நக்குவான் தானே?

பணப்புழக்கம் உள்ள வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் மற்றும் எல்லா நாடுகளிலும் ஊழல் உள்ளது; அதன் விகிதம் மட்டுமே மாறும்!

என்னைப் பொறுத்தவரை தமிழன் ஊழல் செய்தால் அந்தப் பணம் தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தான் உலவும்! அதனால் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும்!
ஏனென்றால் யாரும் பணத்தை தின்று விட முடியாது! 

அந்த வகையில் தமிழர்கள் செய்கிற ஊழல் மகா குற்றம் கிடையாது!

ஊழல் செய்த பணத்தைக் கொண்டு அவர்கள் அணுகுண்டு தயாரிக்கவில்லை! கல்வி நிறுவனங்கள் கட்டி, பாதி பணம் 'கோட்டா' வழியாக சம்பாதிக்கிறார்கள், மீதி ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அறிவு வேலை வாய்ப்பு பெற்று தருகிறார்கள்!

அதனால்தான் தமிழகம் உலகத்திலேயே அதிக உயர்கல்வி படித்தவர்களைக் கொண்டிருக்கிறது!

எனவே, நான் என்றென்றும் திராவிட கொள்கைகளை, சமத்துவம் சமநீதி பேசும் தமிழக கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பவன்!

நான் *பெரியார் கண்ணாடி* வழியாக இந்தத் தமிழ்ச் சமூக முன்னேற்றத்தைப் பார்க்கிறேன்!

ஆரிய பார்ப்பன 
ஆர்எஸ்எஸ் பாஜக என்பது, தமிழ் மொழி தமிழ்ப் பண்பாடு, தமிழின உரிமை, தமிழர்களின் உணவுத் தேர்வு, தமிழினக் குழந்தைகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், ஜாதி வேறுபாடு இல்லாத சமூகம், கருவறையில் தமிழ் பூசை போன்ற எல்லாவற்றிற்கும் எதிரானவை!

சுருக்கமாக சொன்னால் ஆர்எஸ்எஸ் பாஜக என்பது தமிழகத்துக்கு ஒரு பெரும் ஆபத்து!

Yozenbalki
💫💫🎊🎊