Translate this blog to any language

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

கண்ணை மூடிக் கொண்டு மேல் நாட்டவரை பார்த்து காப்பியடிக்கும் இந்தியர்கள் !!

எனது நண்பர், நடிகர் அடடே மனோகர் ( முரளி) அவர்கள் 
மேற்படி எனது  "நம் முன்னோர்களின் கட்டிடக் கலை" எனும் வலைத்தளத்தைப் பார்த்து விட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  அவரது உள்ளத்து உணர்வையும் நான் இங்கே பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். 

  

" நண்பரே:

நம் முன்னோர்களின் கட்டிடக் கலை பற்றி தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை. 
ஆம்....அவர்கள் வாழ வீடு கட்டினார்கள்;நாம்
இருக்க கட்டுகிறோம்.  எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு மேல் நாட்டவரை பார்த்து காப்பியடிக்கும் மனப்பான்மைதான்....
அவர்கள் நாட்டு சீதோஷ்ண
நிலைக்கு ஏற்றாற் போல அவர்கள் கட்டிக்  கொள்கிறார்கள்..நல்ல வேளை
எஸ்கிமோக்களைப் பார்த்து காப்பியடிக்காமல் விட்டோமே!

அப்படியேதான் சாப்பாடு விஷயத்திலும்.....மருத்துவர்கள் நெய் கூடாது எண்ணை கூடாது என்பதெல்லாமும் தவறே.
 நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு அளவோடு நெய், எண்ணை எல்லாம் சேர்த்துக் கொண்டே
ஆக வேண்டும்.

இப்படித்தான், முன்பு தமிழ்வாணன் ('கல்கண்டு') எண்ணைய் தேய்த்துக்
குளிப்பதை கிண்டல் செய்திருந்தார்....எல்லா டாக்டர்களும் கூட அதைத்
தவிர்க்க வேண்டுமென்று இப்போதும் சொல்லி வருகின்றனர்.  ஏனென்றால்
நம் தோல் ஒரு one way traffic க்காம்; அதனால் வியர்வையை வெளியே தள்ள முடியுமே தவிர எண்ணையை உள் வாங்கிக் கொள்ளாதாம்.  அதுவும் முற்றிலும் தவறு.    எப்படி இதை அழுந்தந்தத் திருத்தமாக சொல்கிறேனென்றால் எண்ணை தேய்த்து குளித்த பின் நான் அனுபவித்த சுகமும் தேய்க்காமல் நான் அனுபவித்த சோகமும் தான்.  நம் நாட்டுக்கு அது நிச்சயம் தேவை.  பிறந்த குழந்தைக்கு எண்ணைய் தேய்த்து குளிப்பாட்டுவதும்
சுத்தமாய் நின்றுவிட்டது.  அது மிகவும் தவறு.  எல்லாம் அரைகுறை படிப்பால் வந்த வினைதான்.

இப்படியேதான் நாம் உடை உடுத்துவதும்...பருத்தி ஆடைதான் நமக்கு
தோதுபடும்..  ஆனால்.....இனி ஏது சொல்லியும் பயனில்லை... ஆடையில்லாத ஊர்;  நாமும் நிர்வாணமாயிருப்போம்....

முடிந்தால் என் வீட்டிற்கு ஒரு தடவை வந்து போங்கள்...110 வருடங்களுக்கு முன் கட்டியது....நாட்டு-ஓடு வீடு.....களி மண்+காரை சுவர்...12 அடி உயர
கூரை...பின்னால் பெரிய தோட்டம் (ஆனால் என் தகப்பனாருக்குப் பின் 
அது தோட்டமாயில்லை...சும்மா புதர் மண்டி கிடக்கும் ஒரு திறந்த வெளி..
மத்தியானம் 4 மணிக்கு மேல் நல்ல இதமான காற்று.) வீட்டுக்குள் எப்போதும் குறைந்தது 4 டிகிரியாவது வெளியை விட உஷ்ணம் குறைந்தேயிருக்கும்..
கீழே தட்டு ஓடு...,மேலே ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப் பட்ட நாட்டு ஓடு...
உஷ்ணத்தை வாங்கும் வேகத்திலேயே திருப்பியனுப்பிவிடும்...களி மண்+காரை சுவர்களும் அவ்வாறே.....ஒரேயொரு குறை...இரண்டு பக்கமும் இடைவெளி யில்லாமல் வீடுகள்...சன்னல் வசதி சிற்சில அறைகளில் போதாது...மேலும் அந்த நாட்டு ஓடுகளை சரியாய் பழுது பார்த்து அடுக்க
இப்போது ஆட்களே கிடைப்பதில்லை....(மழை காலத்தில் சிறிது கஷ்டம்தான்
சென்னை மழையாதலால் சமாளிக்கிறோம்.)

நன்றி; வணக்கம்.

அன்பன், முரளி. "
___________________________________________________
முரளியின் மேற்படி கருத்துக்களில் நூறு சதவிகிதம் உடன்பாடு 
எனக்கு உண்டு!
இதனைப் படிக்கும் உங்களுக்கும் அப்படி இருக்கும் என்று நம்புகிறேன்!

திரு. முரளி அவர்களுக்கு - நன்றி!

-மோகன் பால்கி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: