Translate this blog to any language

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

The child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்!!



மலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்! அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். 

இவன் மட்டும் வழிமாறி எப்படியோ கல்லுடைக்கும் பணிக்கு வந்து சேர்ந்து விட்டான். கல்லுடைக்கும் பகல் நேரம் போக அவன், மலைகாடுகளில் இரவெல்லாம் அலைந்து திரிந்து அரியவகை மூலிகைகள், உலோக தாதுக்களை கொணர்ந்து வித விதமான நுட்பக் கருவிகள் செய்து வைத்துக் கொள்வான். அதைக் கொண்டு நினைத்த வண்ணம் அதிசயம் செய்வான். அதாவது கற்களைக் கவிதை பாடச் செய்யும் கலை! எந்த மலையானாலும் ஒரு சிறு குத்துக் கோட்டில் இரு கூறுகளாக்குவது, பல கூறானவற்றை மீண்டும் வடுக்களின்றி சேர்ப்பது, கிடைத்த கற்களில் உயிரோட்டமான அழகிய தெய்வச்சிலைகளை மிகசொற்ப நேரத்தில் உருவாக்குவது இன்ன பிற சாகசங்கள். இப்படியாக பல்லாயிரம் அழகிய உயிர்ச் சிலைகள் வடித்தவன் அவன்!

அதனால், அவனைத் தேடி வரும் எவரும் வெறும் கல்லுடைக்கும் வேலை போக, அவர்களுக்கு ஆதாயமான சிற்பங்களை, உருவங்களை செதுக்கித் தரும்படி கேட்டு அவ்வாறே சிலமணித் துளிகளில் வேலை முடித்து கொண்டு புறப்பட்டு விடுவர். பிறகு, சில மாதம் சில வருடம் கழித்து தனக்கு ஆதாயம் தரும் அல்லது தன் இரத்த பந்தம் உடைய பிறரை இவ்வாறே அழைத்து வந்து அவர்களுக்கும் குறைந்த கூலியில் ......( Contd...) 

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

Worst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் !



பைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். 

வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்துசேரும் பிற மாவட்டத்து/மாநிலத்து மக்கள் தொகை, பெருகி வரும் அடுக்ககங்கள் இதுதான் இன்றைய சென்னையில் நிலை. அதனால் இங்கு அடுத்தவர்கள் முகமோ முகவரியோ தெரியாத நிலையில் நல்லவன் கெட்டவனைப் பிரித்தறிந்து கவனமாய் இருக்க இயலாச் சூழலை காலம் கொண்டுவந்து சென்னையிடம் சேர்த்திருக்கிறது! இனி சென்னைக்கு கஷ்ட காலம்தான் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! முக்கியமாக காவல்துறைக்கு இனி சவாலான காலம் துவங்கிவிட்டது!

இரண்டு நாட்களுக்கு முன்பு கெல்லிஸ் சிக்னலைத் தாண்டும் போது ஒரு நிகழ்ச்சி. சிக்னல் முடியும் சமயம், காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் மார்வாடி இளைஞர்கள் இருவர் வளைத்தும் நெளித்தும் அபாயகரமாக திரும்ப, சப்தம் கேட்டு நிலை தடுமாறி ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டி-யில் இருந்து விழுந்து விட்டாள். காயம் பெரிதாய் ஏதும் இல்லை எனினும் இதைக் கண்ணுற்ற பலருக்கும் அந்த இளைஞர்கள் மீது பெருங்கோபம் ஏற்பட்டது. அவர்கள் போன வேகத்துக்குபோய் அவர்களைப் பிடிக்க முடியாது என்று தோன்றியது. அது போகட்டும் இது வொரு சின்ன சம்பவம் தான் ! இது போன்ற கதைகள் சென்னையில் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

ஆனால் இது போன்ற, இன்னும் இதைவிட அபாயகரமான மற்றும் அநாகரிகமான வாகன ஓட்டிகளை சென்னை போக்குவரத்து காவல் துறை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதுதான் இங்கு கேள்வி? 

முன்பெல்லாம், 80- களில் இருந்தது போல, தவறு நிகழும் இடத்திலேயே ஆளை மடக்கி காற்றைப் பிடுங்கி விடுவது, நாலு சாத்து சாத்துவது  அசிங்கமாக திட்டுவது போன்ற எதுவுமே செய்யாமல் (போலீசார் அப்படி செய்தால் உடனே நம்ம ஆட்கள் கேடுகெட்ட ஜென்மங்களுக்கு எல்லாம் மனித உரிமை பேசவந்து தொலைப்பார்கள்..) பொம்மை போல இருந்தால் அல்லது ஆளும் அரசுகள் அப்படி (வோட்டு வாங்குவதற்காக) கைகட்டி வாய் பொத்திக் கொண்டு  இருக்கும்படி காவல் துறைக்குச் சைகை செய்து வைத்தால் வீங்கிப் பெருகும் சென்னையில், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அந்தக் கடவுளாலும் முடியாதுடா சாமி ! 

அட இல்லையா? அநாகரிகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஓரிரு முறை மன்னிப்பு. அதனை அவர்களின் டிரைவிங் லைசென்சில் உடனே பதிந்து வைப்பது. அதன் பிறகு அவர்கள் அஞ்சி நடுங்கும் படியான அளவுக்கு குறைந்த பட்ச சிறைத் தண்டனையே ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை கடுங்காவல் சிறையில்....(Contd..)

புதன், 18 ஏப்ரல், 2012

students' suicidal stupidity & timidity: தன்னுயிர் மாய்க்கும் கோழைத்தனம் கற்பிக்கும் கல்விக் கூடங்கள்!

Ms. Thairiya Lakshmi
The suicide note left by Dhyriya Lakshmi.  .
Her suicidal note in Tamil 
தமிழகக் கல்விக் கூடங்கள் தற்கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன. இந்த கல்வி ஆண்டில் மட்டும் வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து வருவதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு ஆரம்ப பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை சரமாரியாக தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் மாணவர்களுக்கு எதார்த்தமான வாழ்வியல் சூழ்நிலையை பழக்காததே ஆகும். காதல் தோல்வியோ, தேர்வில் தோல்வியோ இதுபோன்ற எதையும் தாங்கிக்கொள்ள இயலாமல் மாணவர்கள் கோழைத்தனமாக தேர்ந்தெடுப்பது மரணத்தைதான்!

பணத்தை வாங்கிக் கொண்டு மார்க் வாங்குவது குறித்து கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடங்களில் தோல்வியை தைரியமாக எதிர்கொள்வது குறித்த வாழ்வின் எதார்த்தத்தை கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

2011 – 12 கல்வி ஆண்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 15 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்து ஒரு வாரத்திற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்பொழுதே கல்வித்துறை விழித்துக்கொண்டிருந்தால் நேற்றைய (17.4.2012) தைரியலட்சுமியின் தற்கொலை வரை மாணவர்களின் மரணம் நீண்டிருக்காது.

கல்வியின் நிலை:

2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதே ஐ.ஐ.டியில்...

சனி, 14 ஏப்ரல், 2012

Mobile Number Portability (MNP) - 7 Easy steps!

 


Do you want to change your service provider 
for some bitter reasons, 
keeping your same mobile number?

For e.g. you may like to migrate from Aritel to Vodafone or vise versa or any existing "X" to "Y" (new) mobile service provider as you like. Then what should you do? Many of us not aware how to port away from one provider to another one and we assume that it is an arduous job. 

No, it is not so and in fact it is a very easy process simplified by TRAI which any one can do for himself. I myself migrated few times and assisted many of my friends to change over to other good service providers!! 

My ambition here is, if many Indians are aware of these migrating possibilities and easy process in that, they will choose good companies and will migrate to them as and when required. It will create an impact in some of the mobile service providers and they in turn 'may' come down a little, will provide good services and may stop fraud billings to their poor Indian customers. 

However, until a parallel measuring device/server, set up by TRAI  to monitor all mobile services and billing methods, the persisting basic issues of the millions of mobile customers of India would not be solved ever!


OK. let us know the 7 easy steps: 


(MNP - step by step process  involved in porting/migrating)

First Step: Take your mobile and type 'PORT' leave one space and type your mobile number
(for e.g. PORT 9840042904) and send by sms to
1900....(Contd.)

புதன், 4 ஏப்ரல், 2012

Get a Patent & Fool those Ducks: அப்படி சொறியாதே...நான் காப்புரிமை வாங்கி இருக்கிறேன்!

       

(தாத்தா அங்கு தெருவோர திண்ணையில் அமர்ந்து வெற்றிலை குதப்பியபடி இருக்கிறார்..குண்டூஸ் அப்போது விளையாடிவிட்டு அங்கு வருகிறான்)

குண்டூஸ்: தாத்தா! நான் ஒன்னு கேப்பேன் பதில் சொல்றீங்களா?

தாத்தா: கேளு கண்ணா! ஆனா குண்டக்க மண்டக்க கேக்கக் கூடாது...ஜென்யுனான கேள்வியா இருந்தா பதில் சொல்வேன்.

குண்டூஸ்: இது நான் ரொம்ப நாளா கேட்கனும்னு இருந்தேன் தாத்தா; கிண்டல் கேள்வி எல்லாம் இல்ல!

தாத்தா: அப்பன்னா கேளு!

குண்டூஸ்: இந்த (patent right) 'பேடன்ட் ரைட்'-ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்ன தாத்தா?

தாத்தா: அதுவா..? அதாவது நான் ஒரு புதுமையான கருவியை ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சி மார்கட்டுல விற்பனைக்கு அனுப்புறேன். ஒருத்தன் அதே மாதிரி ஒன்னை காப்பி அடிச்சி என்னை விட குறைச்ச விலைக்கு வித்தா எனக்கு நஷ்டம் தானே? அப்போ, அதை தடுக்க நான் என் கருவிக்கு 'காப்புரிமை' வாங்கி வச்சிக்குவேன். அதுதான் 'பேடன்ட் ரைட்' கண்ணா!

குண்டூஸ்: அதாவது நீங்க கண்டுபிடிச்ச கருவியை நீங்க யானை விலை குதிரை விலை வச்சி விப்பீங்க! வேற எவனும் அதே மாதிரி கருவியை குறைஞ்ச விலைக்கு கூட விக்கக் கூடாது! அதை தடுக்க ஒரு குறுக்கு வழிதான் இந்த பேடன்ட் ரைட்...அப்படிதானே தாத்தா?

தாத்தா: டேய்! நீ ஏன்டா எப்பவும் தப்பு தப்பாவே யோசிக்கிற? நீயே நாளைக்கு தண்ணிய பெட்ரோலா மாத்துற மாதிரி ஒரு கருவி கண்டு பிடிச்சி அதுக்கு ஒரு பேடன்ட் ரைட் வாங்கி வச்சிட்டா உலகம் முழுசும் இருந்து உனக்கு கோடி கோடியா.....(Contd..)