Translate this blog to any language

வியாழன், 21 ஜனவரி, 2010

Be ready to Transform my Friends! மாற்றத்துக்கு நாம் தயார் ஆவோம் நண்பர்களே!

BSNL-Broad Band அய்யோ வேண்டவே வேண்டாம்!
போதுண்டா சாமி!

நாமும் Air Tel, Reliance, Tata என்று மூன்று Service Provider-களை மாற்றி
நம்ம அரசு நடத்தும் BSNL நல்லா இருக்கும்னு எல்லாரும் சொல்றதை நம்ம்பி.....
ஆறு மாசமா படற பாடு கொஞ்சம் நஞ்சம் இல்ல!

எப்பவும்
1. No connectivity.
2. Disturbed Connection.
3. No Phone connection-No dial tone in the phone.
4. No speed...that is less than 50 Kbps (they boast uppp...to 10 Mbps speed)
5. No service...No one will pick your complaint phone.

கடந்த ரெண்டு நாளா நானும் விடாம காலை மதியம் இரவு என்று, இவங்க இலட்சணம் தெரியட்டும்னு, அவங்க சொல்லியிருக்குற, அதாவது Telephone-பில்லில் போட்டு இருக்கிற மற்றும் எனக்கு சொல்லப்பட்ட எல்லா நம்பர்களுக்கும் போன் போட்டு வெறுத்துப் போனதுதான் மிச்சம். Grievances complaints GM (Central) GM(North) GM(South) GM(West) GM(O,BD & BB) இந்த மாதிரி 15 விதமான நம்பர். எல்லாம் ரிங் ஆவுது. ஆனா ஒருத்தர் போனை எடுக்கனுமே? இதையெல்லாம் monitor பண்ண இந்தியாவுல யார் இருக்காங்க சொல்லுங்க.
அதனால நான் என்ன முடிவுக்கு வந்தேன் என்றால்... அரசு நடத்தும் எல்லாம் இப்படித்தான் இருக்கும். ஏன் என்றால் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் கூட பதவி பறிப்பு பயமோ, தண்டனை பற்றிய அச்சமோ கிடையாது.
(There is no Reward and Punishment System)

மேலும் எந்த அரசும் ஒரு தனியார் நிறுவன முதலாளியைப் போல "உன்னால் எனக்கு என்ன லாபம்" என்று தொழிலாளியை பார்த்து எந்த விதமான கேள்வியும் கேட்பதில்லை. Customer Care Unit - என்ற ஒரு விஷயமும் அங்கு இல்லவே இல்லையே! எனவே அரசுத் தொழிலாளிகள் பெரும்பாலும் எந்தக் கேள்வி முறைகளும் இன்றி பாதி நாள் கூட ஒழுங்காக வேலை பார்க்காமல் பொது மக்களுக்கு துன்பம் விளைவித்து வருவது கண்கூடு. (சில அரசுத் துறைகள் சில நல்ல மனிதர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு)
எனவே நண்பர்களே!
தயவு செய்து BSNL பக்கம் தலை காட்டாதீர்கள்!
முடிந்தால் மாற்றிவிடுங்கள்!
நானும் மாற்றப் போகிறேன்!
எப்படியோ இந்த அரசுத் துறைகள் நாசமாக போகட்டும்!
இது எல்லாம் அழகாக மாறும், சிறப்பாக செயல் படும் என்ற நம்பிக்கை எனை விட்டுப் போய்விட்டது.
நீங்களும் பாருங்களேன்!

அரசு பேருந்துகள் - தனியார் பேருந்துகள்..
அரசு கட்டிடங்கள் - தனியார் கட்டிடங்கள்..
அரசின் சாலைகள் - தனியார் சாலைகள் ..
அரசுப் பணியாளர்கள் - தனியார் நிறுவன பணியாளர்கள்..
நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

இன்னும்,
சிதைந்து அழுக்கடைந்து துர் நாற்றம் அடிக்கும் நமது அரசாங்க ரயில்கள் உலகப் பிரசித்தம்!
எனவே, மாற்றத்துக்கு நாம் தயார் ஆவோம் நண்பர்களே!

-மோகன் பால்கி

வெள்ளி, 1 ஜனவரி, 2010

2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு பிறந்து விட்டது நண்பர்களே !
எப்போதும் போல இந்த 2010 ஆம் ஆண்டு நமக்கு நன்மைகள் பலவும் கொண்டு வரும் என்று நன்றாக நம்புவோம். என்ன செய்வது நம்பிக்கை தானே வாழ்க்கை. 2009 ஆம் ஆனது நமக்கு பல சோகங்களை கொணர்ந்து தந்து விட்டு சென்று உள்ளது. ஆறாத ரணங்களையும் வரலாற்றில் அவப்பெயரையும் தான். ஆம் ! என்னதான் போராடினாலும் சில சமயம் உண்மை தற்காலிகமாக தோற்று அதர்மம் ஜெயித்து விடுகிறதே. அதைதான் விதி என்றார்களோ?
ஈழத் தமிழர்களின் முடிவற்ற துன்பம், முத்துக் குமாரின் தியாகம் வீண் போனது, இந்திய இலங்கை அரசுகளின் துரொகம் மத்திய மாநில அரசுகளின் நாடகம், இன்னும் உலக நாடுகளின் பாரபட்ச-பாராமுகம் போன்ற அதிர்ச்சியான காட்சிகள் கண்டேன். எனினும் உலகம் தன்னை தொடர்ந்து செப்பனிட்டே வந்துள்ளது உண்மை. எனவே, நம்புவோம்! கதி இழந்த நல்லவர்களுக்கு நன்மைகள் வந்து சேரும் என்றும் "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின்னொரு நாள் தர்மம் வெல்லும்" என்றும்!
சரி! நீங்கள், உங்கள் குடும்பம், தெரு, ஊர் யாவும் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்!
-மோகன் பால்கி

வெள்ளி, 17 ஜூலை, 2009

தமிழின் சிறப்பு இயல்புகள் !



நண்பர்களே!
நான் ஏதோ ஒரு செய்திக்காக விக்கி பீடியாவை பார்க்க நேர்ந்த போது

தமிழ் பற்றி
நிறைய செய்திகள் இருந்தது. நீங்களும் பாருங்களேன். உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்!




http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.A8.E0.AF.82.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D

அன்புடன்
மோகன் பாலு.
சென்னை.

திங்கள், 13 ஜூலை, 2009

எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்


எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம் 9.07.2009 வியாழன் அன்று காலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "மகேஷ் மஹால்" திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது.

முன்தினம் புதன் கிழமை 8.07.2009 அன்று மாலை வரவேற்பு விழாவின் போது எடுத்த மணமக்களின் ஒளிப்படத்தை இத்துடன் தற்சமயம் இணைத்துள்ளேன். பிறகு மேலும் படங்களை இங்கு சேர்ப்பேன்.
உங்கள் நல்வாழ்த்துக்களை மானசீகமாக இங்கிருந்தே அனுப்பி வையுங்கள்!

மணமகள்: M.B.Valentina
மணமகன்: D.Vijay

வெள்ளி, 12 ஜூன், 2009

நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!


நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!

எனது இளைய மகள் .பா.வானவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசாக மடிக் கணினிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இரண்டாவது மாணவியாக வந்தமைக்கு தமிழக அரசின் சார்பில் 8.6.2009 திங்கட் கிழமை அன்று "மடிக் கணினி" (Lap top - Acer-Travel Mate 5730 ) வழங்கப் பெற்றது.

அவ்வமயம், தமிழக முதல் அமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்கள், தமிழ் நாடு அரசு "தலைமை செயலகத்தில்" வைத்து எனது மகளுக்கும் மற்றும் ஒன்பது பேருக்கும் பரிசு வழங்கி சிறப்பித்ததை அனைத்து செய்தி ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று மாலையிலும் மற்றும் மறு நாளும்
வெளியிட்டு /ஒளிபரப்பின.
நிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.

( ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று மூன்று பரிசுகள் வீதம் சென்னை மாவட்டம், திருவள்ளுவர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டத்துக்கு மட்டும் மேற்படி நாளில் முதல் அமைச்சர் கையால் பரிசு வழங்கப் பெற்றது. சென்னையில் மட்டும் மூன்றாம் பரிசு மற்றும் நான்காம் பரிசு பெற்ற இரண்டு மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் ஒரே மாதிரி இருந்ததால் சென்னைக்கு நான்கு பரிசுகள் கிடைத்தன. மற்ற பிற மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறிதொரு நாளில் பரிசு தருவார்கள் என்று அறியப்படுகிறது)

அது மட்டுமின்றி சென்னை-பெரம்பூர் லூர்து பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், பள்ளியின் முதல் மாணவியாக தேறியமைக்கும் பள்ளியின் சார்பில் விரைவில் பரிசு வழங்கப் பெற உள்ளது.

இந்த நல்ல சேதிகளை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மடிக்-கணினி பெறும் செய்தித் தாள் புகைப் படங்கள் சிலவற்றை இங்கு இணைத்து உள்ளேன். ( நடுவில் ரோஜா நிற சுடிதார் அணிந்து இருப்பது என் இளைய மகள் வானவி )

(With Pink colour Churidhar-standing with the Laptop at the centre, is my daughter)

Also click here to visit the URLs:http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=11498
தினமலர் மற்றும் மக்கள் முரசு (இது இரண்டும்தான் ஈ-செய்தியாக எனக்குகிடைத்தது, மற்ற செய்தி தாள்கள் Hard-copy யாக என்னிடம் உள்ளன)


என்றும் அன்புடன்,
மோகன் பாலகிருஷ்ணா.

வெள்ளி, 29 மே, 2009

இந்தியா உதவியால் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோற்கடிப்பு !



ஜெனீவா, வியாழன், 28 மே 2009( 12:38 IST )





சிறிலங்க படையினர் நடத்திய தமிழினப் படுகொலை உள்ளிட்ட மனித
உரிமை மீறல்கள் குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக
இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்ததால்,
அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.


ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை
ஆணைக்குழுவில் கடந்த 2
நாட்களாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்க அரசாங்கம் நடத்திய
மனித உரிமை மீறுல்கள்
குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய
நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து முன்வைத்தது.


இந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது ஈழத் தமிழர்களுக்கு
எதிராகவும் ராஜபக்ஷே-வை
ஆதரித்தும் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள்
செயல்பட்டு வந்தன.

இதனால
், இந்த தீர்மானம் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள்
எழுந்ததால் தீர்மானத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர்
அது நேற்று மாலை (இந்திய நேரப்படி நேற்றிரவு)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது எஆழத் தமிழர்களின்
நியாயமான உரிமைகளை
ஆதரித்து மேற்குலக நாடுகள், குறிப்பாக சுவிட்சர்லாந்த
, ஜெர்மனி,
இங்கிலாந்த
, பிரான்ஸ, இத்தாலி, கனட, சிலி, மெக்ஸிகோ
உள்ளிட்ட
நாடுகள் வாக்களித்தன.


ஆனால் இந்த நல்லதொரு தீர்மானத்திற்கு எதிராக இந்திய,
பாகிஸ்தான
, சீன, மலேசிய, இந்தோனேசிய, கியூப,
ரஷ்யா,
ஆப்ரிக்க உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வாக்களித்தன
.
(இதில் தமிழர்கள் நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய விஷயம்
பாகிஸ்தான
, சீன, மலேசிய, இந்தோனேசிய
போன்ற நாடுகள்
இந்தியாவின் பகை நாடுகள்-மற்றும் போட்டி நாடுகள்...இந்தோனசியாவில்
சமீபத்தில் தமிழர்கள் தாக்கப் பட்டது சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்
பட்டதும் நினைவிருக்கலாம்)

மற்ற 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு ஆதரவாக 17 நாடுகளும்
எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்க அரசாங்கத்திற்கு
எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல்
போனது.


அதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்க அரசாங்கமும்
தனது ஆதரவு நாடுகளின்
ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் தீர்மானம்
ஒன்றை முன்வைத்தது.
இந்த தீர்மானம் மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.


சிறிலங்க அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த
தீர்மானத்திற்கும் இந்தியா
உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக
வாக்களித்தன.


ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.


எனினும் வாக்கெடுப்பின் முடிவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும்
தீர்மானத்திற்கு ஆதரவாக
27 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள்
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் சிறிலங்கா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
ராஜபக்சேவுக்கு நிதியுதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்ட
து.


இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 தற்காலிக பிளாஸ்டிக்
முகாம்களில்
3 லட்சம் மக்கள் வசிப்பதால் அங்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக
ஐ.நா.வின் மனித
உரிமைகள் சபை பிரதிநிதி கவலை தெரிவித்துள்ளார்.

இதுதான் தமிழர்களின் தற்போதைய தலை விதி!

நமக்கு பதவிகள் முக்கியம்; வெறும்-தமிழ் மொழி முக்கியம்.
அதை பேசும் மனிதர்கள் எங்கு செத்தாலும் நமக்கு என்ன?


நம் தமிழ் தலைவர்களுக்கு என்ன அக்கறை அங்கே இருக்கப் போகிறது.
அவர்கள்
குடும்பம் ஹிந்தி, ஆங்கிலம் பேசி "ஹிந்திக் காரர்கள்"
காலடியில்
உட்கார்ந்துபிழைத்துக் கொள்ளும்.

ஆனால் உலகம் முழுதும் பரவி வாழும் புலம்-பெயர்ந்த தமிழர்களுக்கு
யார்
இனிகாவல் இருக்கப் போகிறார்கள்?

ஆறு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கே - அதிலும் அவர்களுக்கு
வழிகாட்டியாக
நாம் நம்பும் இங்குள்ள தலை சிறந்த தமிழ் தலைவர்களுக்கே,
இலங்கையில்
நடக்கும் இனப் படுகொலையை பார்த்து மனம் பதறி
இதயம்
வெடித்து 'சதை ஆடாத போது" மற்ற நாடுகளிலும் தமிழர்களுக்கு
இதே
நிலை- (இதை விட மோசமான வரப் போவதில்லை) வந்தால், என்ன செய்து நாம் கிழித்துவிடப் போகிறோம்?

விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்துலாயோ?

திங்கள், 25 மே, 2009

இட்லர்-ராஜ-பக்ஷி ஒரு போர்க் குற்றவாளி!

இலங்கைப் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் சபை தனது கைகளில் எடுத்து வைத்துக்கொண்டுள்ளது.
இது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு சற்று ஆறுதல் தரும் நிகழ்வாகும். 17 நாடுகளின் ஆதரவுடன் நாளை அதாவது 26.5.2009 அன்று இன்றைய இட்லர் 'ராசபக்ஷி' (Raja'butcher) இன் கொடுங்கோல் செயல்களை இனப் படுகொலைகளை வன்மையாக கண்டனம் செய்து 'போர்-குற்றவாளியாக' அவனை அறிவிக்க தீர்மானம் செய்து இருக்கிறார்கள்.
ஆனால், அந்தக் கொடியவனுக்கு ஆதரவாக களமிறங்கி ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்யப் போவது யார் தெரியுமா? கம்யூனிசம் பேசும் சீனா, ரஷ்யா ...அப்புறம் என்ன "சோனியாவின்- ஹிந்தியா" இவர்களுக்கு ஜால்ரா போடும் வேறு சில சில்லறை நாடுகள்.
தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் இந்த ஹிந்தியர்களுக்கு?
வெள்ளைக்காரன் நல்லவன் ஆகிவிட்டான்.
பிரிட்டன் தனது வரலாற்றுக் கரையை துடைத்துக்கொள்ள தயார் ஆகிவிட்டது. மேற்கு உலக நாடுகள் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து சிங்களர்களால் நசுக்கப் படுவதை அறிந்து கொண்டு விட்டன. தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கையின் ஆளும் வர்க்கம் எந்த நாளிலும் மதித்து நடந்தது கிடையாது. இனியும் அது தமிழர்களை மதிக்கப் போவதில்லை.
இனிமேல் அங்கு
என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க-அய்ரோப்ப்பியா நாடுகளின் தலையீட்டில் ஐ-நா மூலம் அங்கு ஒரு
சுதந்திர தனி நாடு அல்லது சம-உரிமை படைத்த சுயநிர்ணய தனி-மாநிலம் ஒரு சில மாதங்களில் அமைத்து தரப் படும்.
உலகத்தமிழர்களை நெகிழ்ச்சி கொள்ளத் தக்க அந்த நிகழ்வு மேற்கு நாட்டு மக்களுக்கும் அங்கு வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமான பாசப் பிணைப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட உலகில் வாழும் பத்து கோடி தமிழர்களுக்கும் ஒரு பெரும் உள்ளக் கிளர்ச்சியை அது ஏற்படுத்தும்.
தமிழர்களின் நியாயமான அந்த உரிமைகளை பெற்றுத் தந்த நாடுகளின் மீது அன்பும், அதற்க்கு எதிராக செயல் பட்ட நாடுகள் மீது வெறுப்பும், குறிப்பாக "ஹிந்தியா" மீது....வெறுப்பும் கோபமும் ஏற்படப் போவது காலத்தின் கட்டாயம்!