Translate this blog to any language

செவ்வாய், 13 ஜூலை, 2010

"என்ன வளம் என்ன இல்லை இந்தத் திரு-நாட்டில்? "

42 கோடி இந்தியர்கள் வறுமையில் தவிப்பு: ஐ.நா. 
ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
First Published : 13 Jul 2010 02:52:59 AM IST


லண்டன், ஜூலை 12: இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 42 கோடியே 
10 லட்சம் பேர் வறுமையில் தவிப்பதாக ஐ.நா. சபையின் 
ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  166 நாடுகளில் பணியாற்றும் 
ஐ.நா. சபையின் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்தியா குறித்து 
ஆய்வு செய்து ஆய்வறிக்கை தயார் செய்துள்ளனர்.   

அந்த அறிக்கையில், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் 
பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் 
மாநிலங்களில் 42.1 கோடி பேர் வறுமையில் வாழ்வதாகக் 
கூறப்பட்டுள்ளது.  

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 26 பின்தங்கிய நாடுகளில் வறுமையில் 
வாடுவோரின் எண்ணிக்கை மொத்தம் சேர்த்தே 41 கோடியாகக் 
கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்திய  நாட்டு ஏழைகளின் எண்ணிக்கை அதையும் தாண்டியுள்ளது.  

அதாவது, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் 
வறுமையின்பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்தியப் பெண்களில் 
பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் ஐ.நா. 
ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

2020-ல் இந்தியா வல்லரசாகும் என்று  மார்தட்டும் வேளையில் 
இந்த ஆய்வறிக்கை  அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

List of countries by GDP (PPP) per capita

From Wikipedia, the free encyclopedia

Source: http://en.wikipedia.org Click here:

If you want to know more details about France just visit this site now: 
https://www.jenreviews.com/best-things-to-do-in-france/


 
World map showing countries above and below the world GDP (PPP) per capita, currently $10,500. Source: CIA World Factbook.
██ above world GDP (PPP) per capita
██ below world GDP (PPP) per capita
This article includes three lists of countries of the world sorted by their  
gross domestic product (GDP) at purchasing power parity (PPP) per capita,
the value of all final goods and services produced within a nation in a given
year divided by the average (or mid-year) population for the same year.

நமது அரசியல் வாதிகள் இந்தியாவை எந்த இடத்தில வைத்து 
இருக்கிறார்கள் என்று பாருங்களேன்! 

"என்ன வளம் என்ன இல்லை இந்தத் திரு-நாட்டில்? "


     Country Rank   World Bank (2009) Intl. $ ஆண்டு வருமானம்
1  Luxembourg 83,978
2  United Arab Emirates 57,821
3  Norway 55,672
4  Singapore 50,701
5  United States 46,436
6  Ireland 41,282
7  Netherlands 40,715
8  Australia 39,231
9  Austria 38,749
10  Canada 37,945
11  Sweden 37,905
12  Iceland 37,602
13  Denmark 36,763
14  United Kingdom 36,496
15  Germany 36,449
16  Belgium 36,048
17  France 34,689
18  Finland 34,652
19  Spain 32,545
20  Japan 32,443
21  Italy 31,909
22  Equatorial Guinea 31,837
23  Greece 29,664
24  New Zealand 28,722
25  Israel 27,673
26  Korea, South 27,169
27  Slovenia 27,008
28  Trinidad and Tobago 25,698
29  Czech Republic 25,232
30  Portugal 24,021
31  Saudi Arabia 23,429
32  Slovakia 22,357
33  Croatia 19,803
34  Hungary 19,765
35  Seychelles 19,614
36  Estonia 19,457
37  Poland 19,059
38  Russia 18,945
39  Antigua and Barbuda 18,716
40  Lithuania 16,743
41  Libya 16,526
42  Latvia 15,412
43  Argentina 14,559
44  Gabon 14,436
45  Saint Kitts and Nevis 14,420
46  Mexico 14,337
47  Chile 14,331
48  Romania 14,198
49  Malaysia 13,981
50  Turkey 13,904
51  Uruguay 13,208
52  Montenegro 13,117
53  Panama 13,090
54  Botswana 13,076
55  Lebanon 12,960
56  Bulgaria 12,888
57  Mauritius 12,861
58  Belarus 12,569
59  Venezuela 12,341
60  Serbia 11,611
61  Iran 11,575
62  Kazakhstan 11,526
63  Costa Rica 11,122
 World 10,671
64  Brazil 10,427
65  South Africa 10,291
66  Azerbaijan 9,652
67  Saint Lucia 9,622
68  Saint Vincent and the Grenadines 9,183
69  Macedonia, Republic of 9,054
70  Colombia 8,870
71  Dominica 8,851
72  Peru 8,647
73  Bosnia and Herzegovina 8,529
74  Dominican Republic 8,446
75  Grenada 8,365
76  Tunisia 8,284
77  Ecuador 8,280
78  Albania 8,246
79  Algeria 8,184
80  Thailand 8,004
81  Jamaica 7,619
82  Turkmenistan 7,252
83  El Salvador 6,721
84  China, People's Republic of 6,675
85  Namibia 6,457
86  Ukraine 6,327
87  Angola 5,789
88  Jordan 5,691
89  Egypt 5,680
90  Maldives 5,466
91  Armenia 5,286
92  Bhutan 5,123
93  Swaziland 4,965
94  Georgia[6] 4,920
95  Sri Lanka 4,779
96  Guatemala 4,749
97  Syria 4,737
98  Morocco[7] 4,575
99  Fiji 4,562
100  Paraguay 4,529
101  Tonga 4,471
102  Vanuatu 4,433
103  Bolivia 4,426
104  Samoa 4,408
105  Congo, Republic of the 4,248
106  Indonesia 4,205
107  Honduras 3,849
108  Cape Verde 3,646
109  Iraq 3,553
110  Philippines 3,546
111  Mongolia 3,527
112  India 3,248
113  Vietnam 2,957
114  Uzbekistan 2,879
115  Moldova[8] 2,828
116  Nicaragua 2,664
117  Micronesia, Federated States of 2,658
118  Pakistan 2,625
119  Solomon Islands 2,551
120  Yemen 2,473
121  Kiribati 2,469
122  Djibouti 2,323
123  Kyrgyzstan 2,287
124  Papua New Guinea 2,285
125  Laos 2,259
126  Cameroon 2,227
127  Sudan 2,201
128  Nigeria 2,150
129  Tajikistan 1,975
130  Mauritania 1,952
131  Cambodia 1,913
132  São Tomé and Príncipe 1,822
133  Senegal 1,806
134  Côte d'Ivoire 1,707
135  Kenya 1,572
136  Ghana 1,511
137  Benin 1,510
138  Lesotho 1,478
139  Zambia 1,431
140  Bangladesh 1,420
141  Gambia, The 1,417
142  Chad 1,347
143  Tanzania[9] 1,319
144  Comoros 1,307
145  Uganda 1,219
146  Burkina Faso 1,189
147  Mali 1,187
148  Nepal 1,156
149  Haiti 1,153
150  Guinea-Bissau 1,073
151  Rwanda 1,071
152  Madagascar 1,050
153  Guinea 1,049
154  Ethiopia 936
155  Mozambique 886
156  Malawi 859
157  Togo 851
158  Sierra Leone 809
159  Timor-Leste 806
160  Central African Republic 758
161  Niger 676
162  Liberia 396
163  Burundi 393
164  Congo, Democratic Republic 320

வியாழன், 10 ஜூன், 2010

Bhopal Disaster - போபால் விஷவாயு கசிவுக்குக் காரணம் - அமெரிக்க மனோபாவம்!


போபால், ஜூன் 9 /2010: மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை இந்தியாவில் அமைத்தது அமெரிக்கா, என்று விஷவாயு கசிவு வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி மோகன் பி. திவாரி தெரிவித்துள்ளார்.
போபாலில் (Bhopal disaster) நடந்த யூனியன் கார்பைடு நிறுவன விஷவாயு methyl isocyanate (MIC) கசிவால்   சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பேர் ஊனம் மற்றும் உடல்-மன நல பாதிப்பு அடைந்தனர். 
காண்க: http://en.wikipedia.org/wiki/Bhopal_disaster இந்த சம்பவம் நடந்து 26 வருடங்களுக்குப் பின்னர் ???? நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது!!!
குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு வெறும்  2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் வெறும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 
வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஜாமீன் பெற்றுவிட்டனர். (அடடா! வாழ்க இந்திய ஜனநாயகம்!)
வழக்கை விசாரித்த தலைமைக் குற்றவியல் மாஜிஸ்திரேட் மோகன் பி. திவாரி தற்போது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணி உயர்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நகல் செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
தீர்ப்பில் மோகன் பி. திவாரி கூறியுள்ளதாவது:
அமெரிக்காவில் அந்த மக்களுக்கு மட்டும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு விஷயங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றன. எனவே விஷவாயு போன்ற ரசாயன தொழிற்சாலைகளை அமைப்பதை அந்த நாடு இந்தியா போன்ற 3-ம் உலக நாடுகள் பக்கம் தள்ளிவிட்டு விடுகின்றன. மேலும், பாதுகாப்பு விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லாத காலத்தில் யூனியன் கார்பைடு நிறுவனம் இந்தியாவில் அமைக்கப்பட்டது.போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கு அமெரிக்காவின் மனப்பான்மையே காரணம். மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் தான் இதுபோன்ற தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க அமெரிக்கா முடிவு செய்தது. (அதாவது, லாபம் எல்லாம் அமெரிக்காவுக்கு, சாவு வந்தால் அது இந்தியாவுக்கு...!!!) 

யூனியன் கார்பைடு நிறுவனத்தில் பாதுகாப்பு விஷயங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இதுகுறித்து அமெரிக்க நிறுவனமோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ பொருட்படுத்தவில்லை. (ஆமா! அமெரிக்காவுக்கு பணம் வந்தா போதாதா?)

விஷவாயு ஒருவேளை கசிந்தால் அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை திட்டம் ஏதும் அந்த நிறுவனத்திடம் இல்லை. (ஆமா! செத்தா இந்தியர்கள் தானே சாகப் போகிறார்கள், என்ற அசட்டை- இறுமாப்பு) விஷவாயு கசிந்தபோது உள்ளூர் நிர்வாகம் 
( இந்தியாவில் ..அதிலும் உள்ளூரில்...நிர்வாகமா...? )விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் கூட ஏராளமான மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்", என்றிருக்கிறார் அவர்.

இன்னும் இதுபோல் எத்தனை வெளிநாட்டு அபாயங்கள் நம் நாட்டில், நமக்குப் பக்கத்தில் இருக்கின்றனவோ? அது அந்த இறைவனுக்கே வெளிச்சம்! ஒவ்வொரு முறையும் மக்களுக்கு மரணம் நிகழும்போது மட்டும் தான் கொஞ்சம் தூக்கத்தில் இருந்து விழிப்பது என்பது நம் மாநில மத்திய அரசுகளின் பழக்கமாகி விட்டது! மீண்டும் அவை  எப்போதும் போலவே தூங்க ஆரம்பித்து விடுவது கண்கூடு!

இனியாவது நம் அரசுகள் எப்போதும் பூரண விழிப்பாக இருக்குமா? 
குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் பற்றிய விஷயங்களில்? 
-மோகன் பால்கி
_________________________________________________________________________________
தினமணி தலையங்கம்: கேள்விக்கு ஒருவரில்லை! 
First Published : 07 Aug 2010 12:17:50 AM 

போபால் விஷவாயு மரணங்களும், வாரன் ஆண்டர்சன் தப்பிச்சென்ற விவகாரமும், இப்போது அதே வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை சி.பி.ஐ.  தாக்கல் செய்திருப்பதும் என்று விவகாரங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் போபால் நகரில் யூனியன் கார்பைடு விட்டுச் சென்ற நச்சுக் கழிவுகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதற்காக ஏற்கெனவே | 200 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.இந்த நச்சுக் கழிவுகளின் அளவு 300 டன் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பாதரசம் முதலாக சயனைடு வரையிலான பல்வேறு நச்சுக்களின் கலவைதான் இந்த நச்சுக் குப்பை. 1984-ல் விபத்து நடந்த பின்னர் கைவிடப்பட்ட ஆலையில் இருப்பவை இந்தக் கழிவுகள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. 1969 முதல் 1984-ம் ஆண்டு வரை-ஆலை செயல்பட்ட சுமார் 15 ஆண்டுகளாகச் சேர்ந்த நச்சுக் கழிவுகள்தான் இவை. அப்போதும் அரசும் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் கண்டுகொள்ளவில்லை. 

விபத்து நடந்து 25 ஆண்டுகள் ஆன பின்னாலும்கூட அதை அகற்றாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தது அரசு.தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (சஉஉதஐ) ஜூலை முதல் வாரம் வெளியிட்ட அறிக்கையில், 1984-ம் ஆண்டு நடந்த விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட மரணங்களுக்கும், ஆலையில் குவிந்துள்ள நச்சுக் கழிவுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், இந்த நச்சுக் கழிவுகள் இந்த ஆலையில் 1969-ம் ஆண்டு முதலாகவே குவிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றால் போபால் நகரின் மண்ணும் நீரும் நச்சுத்தன்மை அடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறியுள்ளது.குவிக்கப்பட்டுள்ள நச்சுக் குப்பையை இன்சினரேட்டர் கருவி மூலம் எரிக்க வேண்டும் என்பதோடு, மேற்பரப்பில் நச்சுக் கலந்திருக்கும் 11 லட்சம் டன் மண் அகற்றப்பட்டு, வேறிடத்தில் புதைக்கப்பட வேண்டும். முற்றிலும் விஷமாகிவிட்ட மூன்று கிணறுகளை மூட வேண்டும், நச்சுக் கலந்துள்ள நிலத்தடி நீரை மின்னேற்றி மூலம் இரைத்து வெளியேற்ற வேண்டும் என்று இந்த ஆய்வு நிறுவனம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. மண்ணை அகற்றுவதற்கு | 117 கோடி செலவாகக்கூடும். நிலத்தடி நீரை வெளியேற்றும் மின்னேற்றிகள் அமைக்க | 30 லட்சம் செலவாகும். இதன் பராமரிப்புச்  செலவு ஆண்டுக்கு | 15 லட்சம் ஆகலாம்.

தற்போது போபால் அருகே பீதாம்பூர் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள மத்தியப்  பிரதேச நச்சு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இக்கழிவுகளை எரிக்கும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஹைதராபாத் நிறுவனத்திடம் நச்சுக் கழிவுகளை எரிக்கப் போதுமான நவீன கருவிகள் இல்லை என்று கூறப்படுகிறது. நச்சுக் கழிவுகளை எரிக்கும் வெள்ளோட்டத்தின்போது, 6 பணியாளர்களுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.மக்கள்தொகை அதிகம் உள்ள இடத்தில் இத்தகைய ஆபத்தான நச்சுகளை எரிக்கும் பணியை நடத்தக்கூடாது, இவற்றை வேறிடத்தில் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அப்படிச் செய்யும்போது இன்னும் பல கோடிகள் செலவு கூடும்.இந்தச் செலவுகளை ஏன் இந்திய அரசு ஏற்க வேண்டும்? என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. 

1969 முதலாகவே நச்சுக் கழிவுகளைக் குவித்து வைத்த யூனியன் கார்பைடு நிறுவனம்தானே இதற்குப் பொறுப்பு? இத்தனை காலமாக இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த ஆலை அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும்தானே இதற்குப் பொறுப்பு?தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை டௌ நிறுவனம் வாங்கியுள்ளது. எங்களுக்கும் நச்சுக் கழிவுகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று சொல்கிறது டெü. "எல்லா இழப்பீடுகளையும் யூனியன் கார்பைடு செய்து முடித்த பின்னர்தான் அந்த நிறுவனம் எங்கள் கைக்கு மாறியது. ஆகவே, நாங்கள் இந்த நச்சுக் கழிவுக்குப் பொறுப்பேற்க மாட்டோம்' என்று சொல்கிறது டெü.யூனியன் கார்பைடு நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த இழப்பீட்டுத் தீர்வைகள் யாவும் 1984 டிசம்பர் மாதம் நடந்த விஷவாயுக் கசிவு மரணங்களுக்கு மட்டும்தானே அல்லாமல், நச்சுக் கழிவை அகற்றும் பணிகளுக்கும் சேர்த்து அளிக்கப்பட்ட இழப்பீடு அல்ல.

மேலும், டௌ நிறுவனத்துக்கு விற்கும் முன்பாக, யூனியன் கார்பைடு நிறுவனம் கேட்டுக்கொண்டதன் பேரில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் இந்த நச்சுக் கழிவுகள் பற்றி ஆய்வு நடத்தி, 1994-ல் அறிக்கை அளித்துள்ளது. மண்ணும் நிலத்தடி நீரும் நச்சுக் கழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து 1996-ம் ஆண்டு தங்களுக்குத் தெரிய வந்ததாக டௌ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழக்குரைஞர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.நிலைமை இதுவாக இருக்க, நச்சுக் கழிவுகளை அகற்றுவதில் தனக்குப் பொறுப்பே கிடையாது என்றும் யூனியன் கார்பைடு செய்யாமல் விட்டதற்குத் தான் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் டெü நிறுவனம் கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருக்கிறது. 

மத்திய அரசும் மக்கள் பணம் | 200 கோடியை ஒதுக்கி, அவர்கள் போட்டுவிட்டுப்போன நச்சுக் குப்பையை அகற்றவும், மண்ணையும் நிலத்தடி நீரையும் தூய்மையாக்கவும் நடவடிக்கை மேற்கொள்வது அதைவிட வேடிக்கை.யாரோ அன்னிய வியாபாரி இங்கே வந்து தொழில் தொடங்கி லாபம் ஈட்டினார். அந்தத் தொழிற்சாலையில் கசிந்த விஷவாயுவால் போபால் நகர மக்கள் பல தலைமுறைகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற நச்சுக் கழிவுகள் மண்ணையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்திவிட்டிருக்கின்றன. அவர்கள் செய்த தவறைத் தட்டிக் கேட்டு நியாயம் தேட வேண்டிய இந்திய அரசுதான் மக்களின் வரிப்பணத்தில் பொறுப்பேற்கிறது. 

பாரதியின் வரிகளில் சொல்வதானால், "கேள்விக்கு ஒருவரில்லை- (எம்மை) கீழ்மக்கட்கு ஆளாக்கினான்'. 
Courtesy: Dinamani  7th Aug 2010   (attached later on)
 

புதன், 9 ஜூன், 2010

Hitler RajaBakshe - கொடுங்கோலன் ராஜபக்ஷே வருகையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவி எரிப்பு! : சீமான், திருமா, வைகோ, நெடுமாறன், நல்லகண்ணு, ராஜேந்தர் உட்பட பெருமளவானோர் கைது!

 
8th June 2010/Tamil Nadu: ராஜபக்ஷே இந்தியா வருவதை 
எதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல
பகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில்
ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு
உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டனர்.
சென்னையில் நடந்த போராட்டத்தின்போது இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ,
நல்லகண்ணு, இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கைதாகினார்கள்.
ராஜபக்ச இன்று இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக வரும்
அவரைக் கண்டித்தும், அவரை வரவேற்கும் இந்திய அரசைக்
கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள்
இன்று போராட்டத்தில் குதித்தன.
இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
நடத்தப் போவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயககம்
அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்குப் பொலிஸார்
தடை விதித்திருந்தனர்.
இருப்பினும் தடையை மீறி பேரணியும், போராட்டமும்
நடைபெறும்என வைகோ அறிவித்திருந்தார். அதன்படி
இன்றுகாலை பத்து
மணியளவில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.
வைகோ, பழ. நெடுமாறன், நல்லகண்ணு, நடராஜன், சீமான்,
விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தொண்டர்களிடையே பேசினர்.
இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ச ஒழிக
என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழக்கினர்.
பின்னர் அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி
பேரணியாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை பொலிஸார்
தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கைது
இதேபோல, சென்னையில் இலங்கைத் தூதரகம் நோக்கி
பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியினர்
கைது செய்யப்பட்டனர்.
ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் திரளான மதிமுக,
தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது கைது
செய்யப்பட்டனர்.
திருச்சியில் ராஜபக்சவின் கொடும்பாவியை சிவசேனா
கட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து 13
தொண்டர்களை பொலிஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மதிமுகவினர்
கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள்
கட்சி சார்பில் ராஜபக்ச கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர்
ராஜபக்சவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்
நடத்தி கைதாகினர்.
நாமக்கல்லில் பொலிஸ் தடையைமீறி கருப்புக் கொடி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது
செய்யப்பட்டனர்.
கோவையில் ரயில் மறியல்
கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச்
சிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்
கைதானார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட தொல்.திருமாவளவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடிகளுடன் திரண்ட
அவர்கள் திடுதிடுவென ரயில் நிலையத்திற்குள் ஓடினர்.
இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று
பிடித்துக் கைது செய்தனர்.
பல்வேறு கட்சிகள் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை
துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்
அறிவிக்கப்பட்டிருப்பதால் துணைத் தூதரகத்திற்கு பலத்த
பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் மதிமுக சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. பல நூறு பேர்
கைதானார்கள்.
43 தமிழ்ப் புலிகள் கைது
தேனியில் ராஜபக்ச வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன்
ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 43 பேர்
கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கையில், கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 120 பேர் கைது
செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில் ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 20 பேரை பொலிஸார் கைது
செய்தனர்.

செவ்வாய், 8 ஜூன், 2010

Indian "Indernet" - நம் இந்திய நாட்டு இணைய வழி சேவையின் இலட்சணம்!


உலக நாடுகளோடு ஒப்பிடும்போது நம் இந்திய நாட்டு இணைய வழி சேவை எப்படி உள்ளது? நாம் இங்கே பார்க்கலாமா?
அது மிகக் கேவலமாக உள்ளது என்பதை இந்த www.speedtest.net  காட்டுகிறது.
பிராட் பேண்ட் இணைப்பு 512 kb - 100 mbps என்றெல்லாம் இங்கு பினாத்துவது எத்தனை ஏமாற்று வித்தை என்பதை கீழ்கண்ட அட்டவணை காட்டும்.
ஒரு தெரு முனையில் இருந்து  நாலு இன்ச் குழாயில் வரும் தண்ணீரை தெருவில் உள்ள நூறு வீடுகளுக்கு அரை இன்ச் வீதம் பிரித்துக் கொடுத்தால் என்னவாகும்? தண்ணீரின் பிரஷர் குறைந்து ஒரு ஏதோ பேச்சுக்கு சொட்டு சொட்டாக வரும் இல்லையா? அது போல இந்தியாவில் பல இணைய சேவை நிறுவனங்கள் (BSNL, Airtel, Reliance போன்றவை) மக்களை ஏமாற்றி வருகின்றன. 
 ஊர் பேர் தெரியாத மற்ற நாடுகள் எப்படி சேவை ஆற்றுகின்றன என்று நாடுகள் வாரியாக பாருங்களேன்!

Average Download Speed                                                 
1
South Korea33.95 Mb/s
2

Latvia24.40 Mb/s
3

Aland Islands23.78 Mb/s
4

Republic of Moldova21.29 Mb/s
5

Lithuania20.78 Mb/s
6

Japan20.77 Mb/s
7

Sweden20.02 Mb/s
8

Romania18.65 Mb/s
9

Netherlands18.00 Mb/s
10

Bulgaria17.79 Mb/s
11

Andorra15.52 Mb/s
12

Liechtenstein15.23 Mb/s
13

Portugal14.74 Mb/s
14

Switzerland14.22 Mb/s
15

Germany13.58 Mb/s
133

India1.33 Mb/s



???????

 

Average Upload Speed

1

South Korea18.90 Mb/s
2

Aland Islands14.76 Mb/s
3

Latvia12.96 Mb/s
4

Lithuania12.86 Mb/s
5

Japan10.47 Mb/s
6

Bulgaria9.08 Mb/s
7

Sweden8.03 Mb/s
8

Andorra7.76 Mb/s
9

Romania7.68 Mb/s
10

Ghana7.52 Mb/s
11

Iceland7.19 Mb/s
12

Republic of Moldova7.13 Mb/s
13

Denmark6.70 Mb/s
14

Russia5.91 Mb/s
15

Mongolia4.91 Mb/s
93

India0.68 Mb/s ???????
 Source: http://www.speedtest.net/global.php#0

உங்கள் வீட்டில் வரும் இணையத்தின் உண்மையான வேகம் என்ன என்று நீங்கள் 
தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்-புக் மார்க் செய்து வையுங்கள்!
http://www.speedtest.net 

-மோகன் பால்கி