Translate this blog to any language

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அன்னா வென்றார்! தர்மம் வென்றது! Victory of Anna Hazare is Victory of Indian people!


ஊழலுக்கு எதிராகப் போர்க்குரல் உயர்த்தி இந்திய / உலக  சமூகத்தை திரும்பிப் பார்க்க செய்துவிட்டார் அன்னா ஹசாரே அவர்கள் ! 

ஊழலை விரும்பும் அரசியல் வாதிகளின் முகத் திரைகள் இவரால் கிழிந்து போனது. இந்திய இளைஞர்கள் அணி அணியாக திரள ஆரம்பித்து விட்டதைக் கண்டு அதிகார வர்க்கங்கள்  யாவும் இன்று கலங்கிப் போயிருக்கின்றன. இந்திய மக்களுக்கு ஒரு சேதி தெளிவாய்த் தெரிந்து போனது. அது என்னவெனில், ஆளும் கட்சி ஆனாலும் எதிரி/உதிரிக் கட்சிகளானாலும் அவர்களுக்கு ஊழலை ஒழிக்க எள்ளளவும் மனமில்லை என்பதுதான் அது. (கொள்ளையில் குளித்தவர்களுக்கு யோக்கியனாகும் மனம் அவ்வளவு சீக்கிரம் வந்து விடுமா என்ன?)

ஊழலுக்கு எதிராக கால வரை அற்ற உண்ணாவிரதம் துவங்கப் போகிறேன் என்று அன்னா அறிவித்தது துவங்கி பன்னிரண்டாம் நாள் இன்று காலை பத்து மணி வரை நடந்த சேதிகள் நமக்கு உணர்த்துவன:


*  உண்மையை தர்மத்தை யாரும் அழித்து விட முடியாது.

*  தகுந்த தலைவன் ஒருவனின் வருகைக்காக நல்லவர்கள் காத்திருக்கிறார்கள்.

*  இளைஞர்கள் சமூகம் அப்படி ஒன்றும் வரை முறை இன்றி கெட்டுப் போய்விட   இல்லை. தர்ம நியாயங்கள் மீது அவர்களுக்கு வளர்ந்தவர்களை விட அதிக அக்கறை இருக்கிறது. அதை வரலாறும் உணர்த்துகிறது.

* எல்லாக் காலங்களிலும் அதர்மம் சரியான தருணங்களில் வீழ்த்தப் பட்டு இருக்கிறது, உதாரணம்: இட்லர், முசோலினி அழிவு. அவர்களது சந்ததிகள் இன்று என்னவானார்கள்?

*  அதர்மம் 'ஒரு எப்போதும் இருக்கத் துடிக்கும் இருட்டு'. அதை நல்லவர்கள் தான் தர்ம-தீபம் கொண்டு தொடர்ந்து எரித்து விலக்க வேண்டியிருக்கிறது.

*   அன்னா ஹசரேவின் எளிமை, உண்மை, உள்ள உறுதி இவற்றைக்  கொண்ட எவரையும் இந்த உலகம் மனதார விரும்புகிறது. காந்திஜி எப்படி உலக மக்கள் மனதை வென்றார் என்பது இந்த எளிய காந்தியவாதியின் அணுகு முறையில் இருந்தே புரிகிறது.
(அன்னாவுக்கு என்னவொரு புன்னகை பூத்த முகம்? ஆனால், எவ்வளவு விடாப் பிடியான கொள்கை உறுதி...தெளிவான வேலைத் திட்டங்கள்...எதிரியின் யுத்த தந்திரங்களை முன்கூட்டியே அறிந்து முறியடிக்கும் சாதுர்யம்...முத்தான படை வீரர்கள். கேஜ்ரிவால், கிரண் பேடி, சாந்தி பூஷன் இவர்களை எல்லாம் என்ன பாராட்டினாலும் தகும்.)

*  இதில் ஊழல் விரும்புவோர்களின் இலட்சணங்களும் வெளிப்படையாகத் தெரிந்து போய் விட்டது. பல்வேறு போர்வைகளில் அவர்கள் வெளிவந்து அன்னா-குழுவினரை விமரிசனம் செய்து திட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தனர்; தமது பிழைப்பு போய்விடுமே என்று. அவர்கள் தெருமுனை துவங்கி பாராளுமன்ற அமைச்சர் வரை பரவி இருந்ததைப் பார்க்க முடிந்தது.
(அது போன்ற ஜந்துக்களை நான் Twitter-இல் நசுக்கி நாறடித்தது தனிக் கதை)

* அன்னா குழுவினரை எதிர்த்தவர்கள் நான்கு ரகம்:
   
 1. குறுக்கு வழியில் உயர்ந்தவர்கள்/ உயரக் காத்திருப்பவர்கள்.
     இதில் பச்சைப் பாமரன் முதல் அமைச்சர்கள் வரை அடக்கம்.
    
 2.  பொறாமை கொண்டவர்கள் / புகழாசைப் பிடித்தவர்கள். 
(ஆம்! அன்னா குறுகிய காலத்திலேயே அடைந்த புகழை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சுப்பிரமணிய சாமி போன்றவர்களின் எழுத்து செயல் அதைப் பிரதி பலித்தது.)

3. ற்பெருமை கொண்டவர்கள்: அதாவது தாம் அதிகம் படித்த அதி மேதாவிகள், அரிய குலப் பெருமை, குடிப் பெருமை கொண்டவர்கள் என்றும் ஆனால் அன்னா ஒரு படிக்காத கிராம வாசி என்றும் முகம் சுளித்தவர்கள்.

4. பெருந்தன்மை இல்லாத 'சித்தாந்த சிறை-வாசிகள் :
இவர்களுக்கு ஒருவரின் நோக்கங்களை விட அவர் அணிந்திருக்கும் பிற அணிகலன்கள் முக்கியமானவை. உதாரணமாக அன்னா அணிந்திருக்கும் காந்தி குல்லாய்! அது போதாதா இவர்களை கொதிப்பேற்ற?
வீதியில் காயம்பட்டு துடிக்கும் தனது குழந்தைக்கு காந்தி குல்லாய் போட்ட ஒருவன் முதல் உதவி சிகிச்சை செய்தால் கூட இவர்கள் வேண்டாம் என்று கூட சொல்லிவிடுவார்கள். அத்தனை ஒரு சித்தாந்த சிறை வாசிகள்! 
இது போன்ற வித விதமான சித்தாந்த கூடாரங்களில் அறிஞர்கள் கூட அடைபட்டுக் கிடக்கின்றனர். ஆளாளுக்கு ஒரு வேலை செய்தால் இந்த மனித தோட்டத்தில் வித விதமான நறுமண மலர்கள் பூக்காதா? ஒரே ஒருவன் மட்டும்உழைத்து ஒரே ஒரு பூ மட்டும் பூத்தால் போதுமா?

அன்னா-குழுவினரை எதிர்க்க அவர்கள் பயன் படுத்திய சொத்தை ஆயுதங்கள் இதோ:

1. "Civil Society" என்பது பாராளுமன்றத்தை விட உயர்ந்தது அல்ல. பாராளு மன்றத்தை வெளியில் இருந்து யாரும் நிர்ப்பந்தம் செய்யவே கூடாது-நீதித் துறை உட்பட". 

எனது பதில்: * அப்படியானால் 150-க்கும் மேலான கிரிமினல் குற்றவாளிகளை உள்ளடக்கிய பாராளுமன்றத்தில் இருந்தவாறு உங்களை காப்பாற்றிக் கொள்ள நீங்களே போட்டுக் கொள்ளும் சட்டங்களை மக்கள் மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்? 
* வோட்டு போட்டு அனுப்பிய மக்களை விட பாராளுமன்றம் உயர்ந்ததா?
* civil society- என்பது எதிரி நாட்டின் ஒற்றர் படையா என்ன? அது இந்திய மக்களின் மன சாட்சியல்லவா? 

2. "Janlokpal" - சட்டத்தின் கீழ் பிரதமரை விசாரிக்கக் கூடாது. அவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர். அது இந்திய இறையாண்மையைக் கெடுத்துவிடும்".

என் பதில்: மடியில் கனம் இல்லாதவனுக்குப் பயம் எதற்கு? தானாக முன் வந்தல்லவா 'என்னை தாரளமாக சோதித்துக் கொள் ' என்று சொல்ல வேண்டும். பயப்படுபவர்கள் ஏதோ பெரிதாகவே தப்பு செய்திருக்க வேண்டும்.
திருட்டுப் போன ஒரு கிராமத்தில் காவலர்கள் வந்து சோதிக்கும் போது கிராம அதிகாரி மட்டும் தன் வீட்டை மட்டும் சோதனையிடுவதில் இருந்து விலக்கு வேண்டும் என்று கேட்பது ஏனாம்? 
தவறு செய்யும் அரசனையே இங்கு தூக்கில் போடலாம் என்ற பயம் இருந்தால்தானே ஒரு நாடு உருப்படும்? 

எப்படியோ, ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் போன்றவற்றில் இலட்சம் கோடிகளில் செய்த ஊழல்கள் வெளிவந்த கோபத்தில் இந்திய மக்கள் இருக்கிறார்கள். உலக மக்களும் இந்திய அரசியல்வாதிகளைப் பார்த்து காறிக் காறி உமிழ்கிறார்கள். சுவிஸ் வங்கிக் கணக்குகள் முழுதும் வெளி வரும் என்ற நம்பிக்கை எனக்கு துளிகூட கிடையாது. திருடர்களுக்காக கட்டப் பட்ட அமைப்புகளில் இருந்து திருடர்களுக்கு எதிரான செயல்கள் நடக்கும் என்று நம்புவது அறிவீனம் ஆகும்!

ஏதோ சில கண்துடைப்பு பணிகள் இங்கும் அதுபோல் அங்கும் நடை பெறக் கூடும். ஆனால் என்னவொரு மகிழ்ச்சி என்றால், Janlokpal- என்ற அஸ்திரம் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைவரையும் பயமுறுத்தும். அதனால் ஒரு 60-70% ஊழல்கள் நிச்சயம் குறையும். "மந்திரி ஒருத்தனே உள்ள போயிட்டான்-கொள்ளையடிச்ச சொத்தையும் புடிங்கிட்டாங்க" என்று பாமரன் ஒருவன் பேசும் வரை ஊழல்கள் குதித்து விளையாடும்தானே?

3. "தை விட வேறு எத்தனையோ முக்கிய வேலைகள் நாட்டில் இருக்க அன்னாவுக்கு வேறு வேலைகள் இல்லையா?" என்று சிலர் கேட்கின்றனர்: 

என் பதில்: வேறு வேலைகளை நீதான் கவனியேன்!
எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறதா என்ன? வெறும் பேச்சு-எதிலும் குறை காண்பது என்பது தவிர இந்த Critics-கள் செய்து கிழித்தது தான் என்ன? கட்டிய வீட்டை குறை சொல்லும் நாடோடிகளின் கதைதானே இவர்கள் கதை? 
இருந்த இடத்தை விட்டு அசையாமல் 'உருவாக்கியதை' குறை கூறுவது தானே  இவர்கள் வேலை? இவர்கள் வாழ்வு முழுவதும் ஒரு சின்ன Constructive- ஆன காரியத்தையும் செய்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்! 

மேலும், ஒரு வீட்டில் கொசுவை ஒழிப்பது மட்டும்தான் ஒரே வேலை என்று எவரும் இங்கு அழுகுணி வாதம் செய்யவே இல்லை. அன்னா கொசுக்களை ஒழிக்க 'முயற்சிக்கிறார்' (கவனியுங்கள்: முயற்சிக்கிறார்!). நீங்கள் மூட்டைப் பூச்சிகளையோ ஈககளையோ ஒழிக்க முன்வருவதை யார் தடுத்தார்கள்?
ஒருவர் வீட்டுக்கு வெள்ளையடியுங்கள், இன்னொருவர் சுகாதாரம் பேணுங்கள், எலி ஒழிக்க திட்டமிடுங்கள், வீட்டில் நாட்டில் உங்களால் முடிந்த ஆயிரம் நல்ல காரியங்கள் செய்து நல்ல பேர் எடுங்களேன்! யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே!
முயற்சியுங்கள்-கையை காலை ஆட்டி ஏதாவது செய்யுங்கள்!
ஆனால், தான் எதுவும் செய்யாமல் யாரோ முன்வந்து பாரம் சுமந்து செய்கிற செயலைக் குறை சொல்லும் அற்பத் தனத்தை என்னென்பது?

எப்படியானாலும், உலகம் தோன்றிய காலம் தொட்டு இது போன்ற தடைகளைத் தாண்டித்தான் மனித சமூகத்தின் நாகரிகம் வளர்ந்து வந்துள்ளது. இருட்டை விலக்க அவ்வப்போது ஒரு பெரும் விடிவெள்ளி அல்லது ஒரு கைவிளக்கு தோன்ற வேண்டி இருக்கிறது. அந்த வகையில் அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லும் அன்னா-குழுவினரை என்ன பாராட்டினாலும் அது மிகவும் குறைவே ஆகும்!

அர்பணிப்பு மிக்க அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர், அனைத்து ஆதரவாளர்கள், தியாக உள்ளம் கொண்ட இந்திய இளைஞர்கள்-இளைஞிகள் அனைவரையும் இந்தச் சமயத்தில் நான் வாழ்த்துகிறேன்-வணங்குகிறேன்!

தர்மமே என்றும் வெல்லும்!

-யோஜென் பால்கி
yozenbalki



                                                                       Anna Hazare...on ending his 12 days fast.
                                                                             28th Aug 2011 at about 10 am.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

"என்னிடம் மந்திரக்கோல் இல்லை" என்று சொல்லும் மன்மோகன் - I have No Magic wand!!!



சில நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 15-இல் செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை  ஏற்றி வைத்துவிட்டு  நம்ம பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்:


இனி நீங்களும் கீழ்க் கண்ட துறைகளில் பணியாற்றினால் கஷ்டப் பட்டு எதற்கும் மெனக்கெட வேண்டாம் இப்படிச் சொல்லுங்கள் அது போதும் :

"திருட்டை ஒழிக்க எங்களிடம் எந்தவிதமான  மந்திரக் கோலும் இல்லை" - காவல் துறை 

" எழுத்தறிவின்மையை ஒழிக்க எந்தவிதமான மந்திரக்கோலும் இல்லை"
 - கல்வித் துறை

" குடிநீர் தட்டுபாட்டை ஒழிக்க.....இல்லை" - குடிநீர் வாரியம் 

" மின்தட்டுப் பாட்டை ஒழிக்க.....இல்லை" - மின்சார வாரியம்

" வேலையின்மையை ஒழிக்க ..... இல்லை" - வேலை வாய்ப்புத் துறை

"குண்டும் குழியுமான மண் சாலைகளை ஒழிக்க......இல்லை" 
- நெடுஞ்சாலைத் துறை 

" நோய்களை ஒழிக்க எந்த விதமான மந்திரக் கோலும் இல்லை"
- சுகாதாரத் துறை

அவ்வளவு ஏன்?

நீங்கள் மாணவராய் இருந்தால் உங்கள் பெற்றோரிடம் இப்படிச்
சொல்லுங்கள்:
" அதிக மதிப்பெண்கள் பெற என்னிடம் எந்தவிதமான மந்திரக் கோலும் இல்லை".

ஒரு கணவராய் இருந்தால் உங்கள் மனைவியிடம் இப்படிச் சொல்லுங்கள்:
" இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள என்னிடம் எந்த விதமான மந்திரக் கோலும் இல்லை".

ஒரு நிறுவனத்தில் பணியாற்றினால் உங்கள் அதிகாரியிடம் இப்படிச் சொல்லுங்கள்: 
"இதைவிட நன்றாக வேலை பார்க்க என்னிடம் எந்த விதமான மந்திரக் கோலும் இல்லை"

இப்படிப்பட்ட ஒரு அருமையான பொன்மொழியை சொல்லித்தந்த "மண்ணு"
வாழ்க-வாழ்க! 

எப்படியோ நாடு நாசமாய்ப் போய் 
பேய்கள் அரசாளட்டும்!

(பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்...என்பார்கள்.
தரும நியாயம் எதுவும் பார்க்காமல் வெறும் சட்டம்/புள்ளி விவரம் மட்டும் பேசும் பேய்கள் இருந்தால் எந்த நாடும் உருப்படாது!)


ஞாயிறு, 31 ஜூலை, 2011

Android Vs Ovi

Android App: நானும் பார்த்த வகையில் Android-Apps பயன்படுத்துவது மிகவும் சுலபமாக இருக்கிறது. இலவசம் மற்றும் பணம் கொடுத்து வாங்கும் apps- என்று இரு பிரிவுகளைக் கொண்டு எதையும் ஒரு சில நிமிடங்களில் தரவிறக்கம் செய்து கொள்வது இதில் எளிதில் சாத்தியம். அதை நானே கண் கூடாக எனது samsung i5801 கைப் பேசியில் கண்டுள்ளேன். 

Ovi - Apps: இரண்டாவதாக சில நாட்களுக்கு முன் வாங்கிய Nokia x2-01 வழியாக Ovi-Store சென்று பார்த்த போது அங்கு உருப்படியான ஒரு Apps-ம் இல்லை என்று தோன்றியது. உதாரணமாக மிக சாதாரணமாக android-இல் கிடைக்கும் Call Blocker App, அது இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.  இருக்கிற மிகச் சில நோக்கியாவின் Apps களை தரவிறக்கம் செய்வது மிக்க கடினமாக உள்ளது. பல சமயம் Ovi-உடன் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அந்த வகையில் நோக்கியா தோற்றுப் போய் விட்டதை உணர முடிகிறது. இனியும் ஜெயிப்பது என்பது அசாத்தியமே!

-யோஜென் பால்கி
3317133862_1cdd4dbd0e 
I’ve been using the latest Android Mytouch phone for the past couple weeks and I wanted to share my experience dealing with the Android Marketplace and how it fares to the recently launched Ovi store.
Things Android Marketplace does better than Ovi:
  • With over 1,200 live applications, Android has made it very easy to search and locate whatever apps a user might need. Ovi search (on the phone and store website) has always had major hiccups and I am surprised that Nokia has not taken any actions to address the issues yet. This needs an immediate attention.
  • All Android accounts are tied with Google Check-out and this makes secure purchasing just a click away. Obviously operator billing is the better choice but since Ovi has not rolled this out in the US yet, I believe Google Check-out (or for the sake of comparison Paypal with Blackberry App World) offer a user friendly way for customers to purchase apps.
  • As much as I hate to say it, but the quality of apps are just much more superior to those found in Ovi store. Many online services and content providers offer native Android apps. Just this week, Amazon launched their latest Android app that essentially allows customers to scan barcodes and search for items in Amazon. When will we see major publishers, gaming properties adopt Ovi?
  • Going back to the previous point, Android is not crowded and for developers it is easier to get downloads.
  • User Reviews are a key part of any application store. Android has built a very strong review platform that makes it very easy to navigate through reviews. Just this weekend, I purchased 6 paid apps solely based on user reviews. You can also email the developer or in some cases Gtalk/Skype them directly from the marketplace and ask questions. Many of the developers proactively respond to users and provide feedback on their apps. This makes the purchasing more exciting to say the least.
  • I am not exactly sure how this works in Ovi store but with a single click I can request a refund of a paid app in Android Marketplace and get my money credited back. I hope it is that easy in Ovi store but maybe somebody can clarify that for me?
This post is in no way to bash Ovi. If you look at Nokia forums or chat with some of the Nokia team on Twitter, you know that they are well aware of the problems and appear to be working on some of these issues. But in my opinion, the one thing that they need to do fast is to improve developer supports and work with publishers of all sizes to get their apps showcased in Ovi and improve the quality of applications available. I’ve had several discussions with Symbian developers over the last few weeks trying to understand the exact pain points and challenges associated with the Ovi store. There are two common themes that I hear from them:
  • Developing for Symbian is much more complicated than other platforms.
  • Many of the application developers have serious concerns about Ovi store DRM. There simply is no way for a developer to protect their app and avoid a free spread of their application through Ovi. They can potentially lose thousands of dollars in revenue if they get their app ported in Ovi. There is a lot of passion behind this subject and I would rather not comment more on it at this time but if you want to know how Symbian developers really feel about it read here.
Having experienced with itunes, Android, Blackberry App World and Ovi, it is all clear to me that in order for Nokia to legitimately challenge Android and others is to refocus on developers and get on their good side. It is not all about quantity and how fast they can get to 1 billion downloads but rather how satisfied their developers and users are with the program.
Picture Credit to Kalel Koven- Flickr

Courtesy: By Payam Dastmalchi


-யோஜென் பால்கி
yozenbalki



 

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

To Expel Falsity Do You Have that Guts? பொய்யை உதறித் தள்ளும் பெருந்துணிவு உங்களிடம் உள்ளதா?

"உண்மையை" (Truth) விரும்ப அதிக தைரியம் தேவை! பொய் கவிதைக்குத் தேவைப் படலாம்; வாழ்க்கையின் மகத்தான தேடல்களில் பொய்யின் தோழமை எதற்கு?


இறை நம்பிக்கை, ஆன்மிக தேடல்கள் என்று வரும் போது ஒரு இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று ஒருவரையும் இன்று பார்க்க இயலவில்லை! (நாத்திகம் என்று வருகையில் அவர்களை விட பெருஞ்செல்வம், சமூகப் புரட்சியாளர் நம் பெரியார் ஈவேரா அவர்கள்!)

எனக்கு ஒரு சில உண்மைகள் பற்றி விலாவரியாகச் சொல்ல வேண்டும்

என்று தோன்றுகிறது. அதாவது இன்றைய மக்களின் மனோ பாவம் பற்றியும், அது கண்டு நான் அடைகிற ஆச்சர்யம் பற்றியும்! ஆனால் நிறைய எழுதினால் யாரும் படிப்பதில்லை-நேரமும் இல்லை- எனவே சுருக்கிவிட்டேன்!

ஒரு முடிபு என்னவென்றால், தனியொரு மனிதன் ஒரு கூட்டத்தோடு இணைந்து ஒரு சில பழக்க வழக்கங்களில் ஊறித் திளைத்ததற்க்குப் பிறகு அவனால் அதில் இருந்து வெளியேற ஒரு போதும் இயலாது என்று தெரிகிறது!


நல்ல பழக்கமோ அல்லது கெட்ட பழக்கமோ, மனிதன் என்பவன் பழக்கத்துக்கு அடிமை. அவ்வளவுதான்! பழக்கத்துக்கு அடிமையான ஒரு மனிதன், தனது அடிமைத் தனத்துக்கு ஏதோ ஒரு மேன்மையான காரணம் கற்பிப்பான். அதற்கொரு மெய்ஞான, விஞ்ஞான விளக்கம் சொல்வான். அறிவு கொண்டு ஆராய்ந்து தீதான ஒரு பழக்கத்தில் இருந்து விடுபடவே மாட்டான்!

இந்த விஷயத்தில் அவனது நிலை ஒரு குடிகாரனின் நிலையை விட மோசமானது ஆகும். மதம். அரசியல் என்னும் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆனவர்கள் கதை அப்படித்தான்! குடிகாரனாவது அதில் இருந்து விடு பட வழி உள்ளது. இவர்களுக்கோ அது போன்ற வழிகள் முற்றிலும் கிடையா!

தாம் ஏற்றுக் கொண்ட ஒரு மதத் தலைவனை/அரசியல் தலைவனை உலகம் தவறு காணும் போதும் அது நிரூபணம் செய்யப்படும் போதும் 'அந்தப் படகில் ஓட்டை விழுந்துவிட்டது' என்று தப்பித்துக் கொள்பவர்கள் எவருமிலர்!


அதற்கு பல சம்பவங்களை நான் சொல்ல இயலும் என்றாலும் தற்போதைய இரு சம்பவங்களை நினைவு படுத்த விரும்புகிறேன்!

1 நித்யானந்தா எனும் சாமியாரின் போலி சந்நியாசம்.

2 சபரிமலை- 'மகர ஜோதி' என்னும் போலியான தீவட்டி வெளிச்சம்.

மேற்கண்ட இரு சம்பவங்களிலும் தாம் ஏமாற்றப் பட்டதை எண்ணி கோபப் பட வேண்டிய பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் அமைதியாக இருந்தனர் என்பது மட்டும் அல்ல, நடுநிலையாளர்கள் அதிர்ச்சியடையும் வண்ணம், அந்தப் போலித் தனத்தை தோலுரித்துக் காட்டிய ஊடகங்கள் மீதே கோபப் பட்டனர்!

இந்தக் கட்டுரை நித்யாநந்தன் - அல்லது மகர ஜோதியின்

உண்மை/பொய்மை தன்மை பற்றி ஆராய வரவில்லை. அதனால் சமூகத்துக்கு ஏற்படும் சில நன்மைகள்/தீமைகள் பற்றி இங்கு அலசவும் வரவில்லை!அதற்கு வேறு ஒரு சமயம் வரும்!

இது, மக்களின் மனோ பாவம் பற்றியே ஆராய வருகிறது.

நித்யானந்தன் ஒரு இளைஞன். ஒரு இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து உணர்ச்சிகளும் அவனுக்கு இருக்கும்-இருக்க வேண்டும்! பசி,தாகம், நுகர்ச்சி உட்பட! அப்படி நுகர்தல் தவறில்லை! எங்கே கேள்வி எழுகிறது என்றால் இப்படி காவி உடையில் பெண் வாடை படாத "சன்யாசம்" பேசிக் கொண்டு தான் ஒரு அனைத்தையும் அடக்கிக் கொண்ட ஞானி போன்று நடித்து ஊரை ஏமாற்றி, திரைக்குப் பின்னால் ஒரு சாதாரண அபிலாட்சைகள் உள்ள சராசரி இளைஞனாக வாழ்ந்து தான் சார்ந்த மதத்தைக் கேவலப் படுத்தியது ஏன் என்று தான்!

இந்த லட்சணத்தில் "நான் ஏன் ஒரு சந்நியாசி" என்ற பேச்சுரை வேறு! அதை " you-tube" இல் போட்டு வைத்திருந்தனர். தொலைக் காட்சிகளில் நித்யா-ரஞ்சிதா லீலைகள் வெளியான ஓரிரு நாளில் அந்த உரையை அவனது பக்தர்கள் வெட்கப் பட்டு எடுத்து நீக்கி விட்டனர்!

அது போகட்டும்! இவ்வளவு அக்கப் போர்கள், அசிங்கங்கள் நிகழ்ந்து ஊரே நாறிய பின்னும் இன்னும் விடாமல் 'நித்யனுக்கு' நித்யம் காவடி தூக்கும் சில என் 'தூரமாய்த் தெரிந்தவர்களைப்' பற்றி யோசிக்கும் போதுதான் ஒன்று தோன்றுகிறது! அது முற்றிலும் உளவியல் காரணம் சார்ந்தது!

தவறென்று தெரிந்தும் 'மீள முடியாதவர்களின்' நிலைக்கு

என்ன உளவியல் காரணம்?

1 . மனிதர்களில் முக்கால்வாசிக்கும் மேலானவர்கள் ஒரு அப்பழுக்கற்ற உண்மையை நேசிப்பதை விட அதிகம் சேரும் கூட்டத்தை நேசிக்கிறார்கள். கூட்டம் சேரும் அளவுக்கு ஏற்ப அங்கு உண்மையும் இருக்கும் என்று நம்புகிறார்கள்!

2 . அங்கு தாம் ஏதோ ஒரு சமயத்தில் ஏமாற்றப்பட்டாலும் கூட, 'மீசையில் மண் ஒட்டாதது' போல் காட்டிக் கொண்டு எதுவும் நடவாதது போல் நடிக்க ஆயத்தமாய் இருக்கின்றார்கள்! (நடிப்பதில் சிவாஜி கணேசன் தோற்கவேண்டும் போங்கள்!)

3 . ஏனென்றால் இவர்கள் போய் வலியச் சென்று, விழுந்து விழுந்து ஆள் சேர்த்த பிற 'புதிய அடிமைகள்' காறித் துப்புவார்களே என்ற அச்சம்தான்!

4 . பிறகு, இருக்கவே இருக்கிறது 'மக்களின்-மறதி-நோய்'. எத்தனையோ பெரிய பெரிய கெட்ட விஷயங்களை எல்லாம் காலம் எனும் நதி மறந்து/ மறைத்துவிட்டு இன்று எத்தனையோ 'பெருசுகள்' எல்லாம் உலகின் அரியணையில், புகழ் உச்சியில் அமரவில்லையா என்ன? அவர்களுக்கு 'நல்லவர்கள்' பலரும் நேற்றும் இன்றும் வெண்சாமரம் வீசவில்லையா என்ன?


என்னமோ போங்கள்! உண்மையை விரும்பவும், ஒன்று பொய்யென்று தெரிந்தால் பாதி வழியிலேயே பிரயாணத்தை நிறுத்திவிட்டு திரும்பி விடவும் மகத்தான தைரியம் தேவைப் படுகிறது! அந்த தைரியத்தை எல்லோரிடமும் நாம் எதிர் பார்ப்பது அறிவீனம்!

யோஜென் பால்கி

yozenbalki