Translate this blog to any language

வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஜனநாயகத் திருடர்கள்! Democratic Thieves!!

நாடு நாய்களிடம் போய்
நாட்கள் ஓடி விட்டன!

மக்கள் பிணி தீர்க்கும் 
மனமிலா தலைவர்கள் 
இந்தத் தேசம் முழுவதும் 
புற்று நோயாய் பரவிப் போயினர்!

முடிமன்னர் ஆட்சியை 
முடித்த மடமையில் 
கிடைத்த பரிசு 
இதோ!
ஊரை அடித்து உலையில் போடும் 
ஜனநாயகத் திருடர்கள்!

உழைக்கும் மக்களின் 
அடிப்படைத் தேவைகள் 
எதுபற்றிய அக்கறையுமின்றி 
நகர்கிறது காலம்!

அன்று

தாடி மீசை ஒட்டி 
அதிகாரிகள் அறியாவண்ணம் 
"நகர்வலம்" வந்து
குறைகள் களைந்து 
ராஜ பரிபாலனம் செய்த 
பழங்கால 'ஒரு-மன்னன்' 
எங்கே;

இன்று...

ஏற்றிய கண்ணாடியும் 
ஏசியின் சொகுசுமாய் 
முன்னும் பின்னும் 
வண்டிகள் மறைத்து 
பூனைகள் புடை சூழ 
வாரிச் சுருட்டும் 
"ஆயிரம்-மந்திரிகள்" 
பதவி சுகம் எங்கே..?

ஆனாலும்...
ஒன்றும் கிழித்தபாடில்லை!

மன்னர் ஆட்சிக்குப் பிறகு
இருந்தது-கெட்டதுதான் மிச்சம்!

வெள்ளைக்காரன் கூட 
இந்தக் கொள்ளைக்காரர்களை 
பின்னுக்குத் தள்ளி 
நல்லவனாகிப் போனான்!
நாளுக்கு நாள்
இந்த தேசத்தில் 
விஷமாய் உயரும் விலை வாசி..
சிதிலமடைந்த உட்கட்டச் சாலைகள்....

மூஞ்சியில் விழுந்து 
பாதை மறைக்கும் 
பறக்கும் குப்பைகள்...
பெருக்காத தெருக்களில் 
பெருகும் தூசு...
இரத்தம் உறிஞ்சும் கொசுக்கள்...
சாக்கடை கலந்த குடிநீர்..
தொப்புள் கொடி துவங்கி 
சுடுகாடு வரைக்கும் 
தொடரும் கையூட்டு...

ஸ்விஸ் வங்கியில் 
இலட்சம் கோடிகளில் பதுங்கிய 
ஏழைகளின் உழைப்பு...
விதவிதமான
கல்விச் சுரண்டல்..
இன்னும் ஒழியாத
சா'தீய' கலவரங்கள்... 
அன்றாடம் நிகழும் 
கொலை கொள்ளைகள்..
மகளிர்-குழந்தைகள் மீது
பாலியல் வன்முறை..

கறி-சோறு போட்டு 
குற்றவாளிகளை கொஞ்சும்
சிறைச் சாலைகள்.... 
கிரிமினல்களின் அரசியல் பிரவேசம்..
பொறுப்பிலா அதிகாரிகள்...
அரசுப் பணியாளர்கள்...
அடிப்படை வசதியற்ற 
இந்திய கிராமங்கள்...
பட்டினிச் சாவுகள்..

அதற்கும் மேலாய்...
விண்வெளிக்கு இராக்கெட் அனுப்பும் 
வல்லரசு இந்தியாவில்...

த்...த்...தூ...! 
நன்னீர் மற்றும் 
கழிப்பிடம் தேடியே 
தொலைகிறது வாழ்வு!

செவ்வாய், 4 அக்டோபர், 2011

Correct Your children But Cripple-Not ever! குழந்தைகளை கண்டிக்கலாம்; தண்டிக்காதீர்கள்!


சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், 'சர்க்கஸ்' தான் நினைவிற்கு வருகிறது. 
மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் 'படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்'?என்று கேள்வி வேறு கேட்பார்கள்.


குழந்தைகளை கையாள்வது எப்படி: பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும்பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்டபடி திட்டுகிறோம். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம். அடுத்து குழந்தை தன்னையோ, மற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்கலாம்.


அடிக்காமல் வளர்ப்பது எப்படி என்கிறீர்களா? குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதைஉணர்த்துவது. சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பொறுமை யின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக,நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல்: மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமைஉண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது. உதாரணமாக 8 மாதக் குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி.
ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், 'பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு' என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்து விடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். 

ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு,சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.'இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்துவளர்க்கிறோம்' என்று நினைப்பார்கள். 

இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் (Khalil gibran) என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
 "குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால்,உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை" 
என்றவரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. 
நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக் குள்ளாகக் கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? 
பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாமே!

நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால்,வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான். நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும். நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா? குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள். நல்ல பலன்தரும் விதைகளாக,விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசிப் பேசித்தான் வளர்க்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், "நீ எதற்குத்தான் லாயக்கு.. நீ பொறந்ததே வேஸ்ட்" என்று திட்டிக்கொண்டே இருந்தால், அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும். பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும். எனவே, மனதளவில்பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. 

இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். 
கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு. 

கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது. 
தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக் குள்ளாக்குவது. 

ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால், அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும். 

மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்து விடக்கூடாது. 
குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது. தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.

-நன்றி: புதிய தென்றல்

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

Be Extremely Careful: Your child can be a target for Religious Conversion! மதம் மாற்றும் கயவர்கள் - உங்கள் குழந்தைகள் ஜாக்கிரதை!


உலகம் முழுவதும் இயற்கையாய் அமைந்த காடுகளையும் மனிதன் அமைத்த பூந்தோட்டங்களையும் நாம் காணுகிறோம். அதில் வித விதமான வண்ணங்கள் உடைய மலர்கள் மலர்கின்றன. மல்லிகை, முல்லை, சம்பங்கி,.ரோஜா இன்ன பிற ஆயிரம் வகை மலர்கள்! உலகில் ஆண்களை விட பெண்களுக்கு மலர்கள் என்றால் கொள்ளைப் பிரியமுண்டு. சிலருக்கு மல்லிகை பிடிக்கும் சிலருக்கு அது ஒத்துக் கொள்ளாது. சிலருக்கு எல்லா மலர்களையுமே பிடிக்கும். 

இதில் கவனிக்கப் பட வேண்டிய செய்தி என்னவென்றால், உலகின் எந்த நாட்டுத் தோட்டத்திலும் ஒரு மல்லிகை மலரை மட்டும் வைத்துக் கொண்டு பிற மலர்களை எல்லாம் அழித்து விடுவது அல்லது பிற மலர்களுக்கு மல்லிகை நிறத்துக்கு "வெள்ளை வண்ணம் பூசுவது" என்ற முட்டாள்தனத்தை எந்தத் தோட்டக் காரனும் செய்யமாட்டான்! ஒரு தோட்டம் என்பதே பல மலர்களின் வசிப்பிடம்!  இன்னும் மனிதக் கால்கள் படாத பல அடர்ந்த காடுகளிலும் பல ஆயிரம் வகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அப்படித்தான் இறைவன் இந்த உலகைப் படைத்தான்! 

ஆனால், வலிமையையும் அற்ப புத்தியும் உள்ள ஒரு அரசன் தனக்கு மல்லிகை பிடிக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக தனது தோட்டத்தில் இருக்கும் பிற மலர்களை எல்லாம் ஒழித்து விடுகிறான். அதோடு தனது நாட்டில் வேறு மலர்களையே எங்கும் தான் காணக் கூடாது என்று சட்டமும் இயற்றுகிறான். அத்துடன் நிற்காமல், வேற்று நாடுகள் மீது படையெடுத்து அவற்றையும் வென்று அங்கும் மல்லிகை தவிர்த்த பிற மலர்களை அழித்து விடுகிறான்! 

இப்போது உலகம் முழுதும் வெண்மை நிறம், பசுமை நிறம் தவிர்த்த பிற வண்ணங்களை தோட்டங்களில் காண முடியவில்லை! முகத்தில் அறைவது போல் உலகம் எங்கும் மல்லிகை... மல்லிகை... "வெள்ளை" மல்லிகை! இப்போது மல்லிகையின் வாசம் தாங்காமல் பலர் மயங்கி விழுகிறார்கள்! பிற மலர்களை நம்பி வாழ்ந்த பூச்சிகளும் வண்டுகளும் பரிணாமத்தில் அம்மலர்களோடு சேர்ந்து காணாமல் போகின்றன! தேனீக்கள் பலவும் இறந்து படுகின்றன! உலகம் வெறுமையாகிப் போகிறது!

இதைத்தான் செய்ய விரும்புகிறார்கள் மதப் பித்தர்கள்!

தான் நம்பும் மதத்தை பிற மதத்தினரும் நம்ப வேண்டும் அந்த மதத்திற்கு அவர்கள் மாற வேண்டும் என்று மன மொழி செய்கைகளால் காரியம் ஆற்றுகிறார்கள்! அதற்காக. பிற மதத்து பிள்ளைகளை பெற்றோர்களின் சம்மதம் இன்றி பள்ளிகளிலும் வீடுகளிலும் வைத்து சிறுக சிறுக துர்போதனை செய்கிறார்கள்; மனமாற்றம் செய்கிறார்கள்! தக்க சமயம் பார்த்து அவர்களை "வெள்ளையடித்து" மதம் மாறத் தூண்டுகிறார்கள்! அதில் அவர்களுக்கு குரூர  இன்பம்!

இவ்வாறு ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளின் உள்ளத்தில் 
அவர்களின் பெற்றோர்கள் அறியாத வண்ணம் 
வேற்று மத நஞ்சு ஊற்றுவதும், 
பெற்றோர்கள் அறியாத வண்ணம்  அக்குழந்தைகளிடம் 
பாலியல் வன்முறையைத் தூண்டுவதும் இரண்டும் ஒன்றுதான்!

குழந்தைகள் தான் என்றில்லை பலவீன மனமுடைய பெண்கள் முதியவர்கள் என்று எவரையும் இவர்கள் சிறுக சிறுக இவ்வாறு வெள்ளையடித்து விடுகிறார்கள்! கரைப்பார் கரைத்தால் கல்லும்தான் கரையுமே!

இதன் பின்னர்தான் இருக்கிறது துன்பங்கள்! அப்படி மனம்/மதம் மாறிய குழந்தைகள்/பெண்கள் படும் பாடு சொல்லி மாளாது! உள்மனதில் ஒரு புதிய மதச் சிந்தனையும் வெளிமனதில் பெற்றோர்களுக்காக நடிப்பதுமாக அவர்கள் கொஞ்ச காலம் அல்லாடுவார்கள்! தக்க வயது/தருணம் வந்ததும் புறத் தூண்டுதல்களால் தனது மதத்தை உதறி விட்டு வேற்று மதத்தை தழுவார்கள்!
அதன் பிறகு இந்தக் கூட்டத்திலும் இருக்க முடியாமல் அந்தக் கூட்டத்திலும் இருக்க முடியாமல் கிடந்து தவிப்பார்கள்! ஒரு பண்டிகை ஒரு நல்ல நாள் என்று வரும் போது இங்கும் ஒட்ட முடியாமல் அங்கும் ஒட்ட முடியாமல் ஆகிவிடும்! இதையெல்லாம் நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்! 

தான் பிறந்து  வளர்ந்த ஒரு மதத்தை விட்டு வேறுமதம் மாறுகின்ற ஒரு பெண் அல்லது ஆணுக்கு காலப் போக்கில் பல்வேறு சங்கடங்கள் ஏற்படுகின்றன.
பிறந்த மதம் சார்ந்த மனிதர்கள் அவனை/அவளை விலக்கி விடுகிறார்கள்! எந்த நல்லது-கெட்டதுக்கும் அழைப்பதில்லை; சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை! இப்போது அவனுக்கு /அவளுக்கு புதிய மதம் மட்டும் கூட இருக்கிறதே ஒழிய பழகிய மனிதர்கள், உறவுகள் எவரும் கூட இருப்பதில்லை! மேற்படி நிலைமையின் தீவிரம் புரிய வரும் போது காலங்கள் பலவும் அப்போது கடந்து விட்டிருக்கும்!! வெறும் சித்தாந்தத்துக்கு மயங்கி உறவுகளைக் கோட்டை விட்ட கசப்பான உண்மையும் அங்கு தெரிய வரும்! மதமாற்றம் என்பது வெறும் அலங்கரிக்கப் பட்ட சிறைவாசம் தான் என்பது ஒருவருக்குத் தெரிய வந்தாலும் அதை வெளிப்பட சொல்ல இயலாது!

நான் கேட்கிறேன்! மல்லிகைப் பூ சூடியவருக்கு மரணமில்லையா என்ன??!! 
இன்ன மதத்தை சார்ந்தவர்களுக்கு நோய் வருவதில்லை என்றோ இறப்பு விகிதம் குறைவு, அவர்களுக்குள் சண்டை சச்சரவு இல்லை, முன்னேற்றம் அதிகம் என்றோ அறிவியல் பூர்வமாக எவரேனும் அறுதியிட்டுக் கூற முடியுமா? பின் ஏன் நம்மிடம் இந்த "வெள்ளையடிக்கும்" மும்முரமும் மூர்கத்தனமும்? நன்னீரில் வாழும் ஒரு உயிரை ஒரு சாக்கடைக்குப் பழக்கினால் கூட நாளடைவில் அவ்வுயிர்க்கு அந்த இடம் பிடித்துப் போகிறது! அதற்காக ஒரு கூட்டத்தில் வாழும் உயிரைப் பிரித்து வேறொரு சூழ்நிலையில் நிரந்தரமாகத் தள்ளும் வன்முறை நன்முறையா? அந்தப் பாவம் நல்லதா?

எது எப்படியோ, இதையெல்லாம் மூர்க்கக் குணம் கொண்ட "மத-மாற்ற பேர்வழிகள்" கேட்கவே மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்! எனவே உங்கள் குழந்தைகளை நீங்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! அவர்களிடம் யாரும் பாலியல் வன்முறை நிகழ்த்த முயற்சிப்பதை கவனமாகத் தவிருங்கள்! அதைவிட கவனிக்க வேண்டியது மதமாற்ற-வன்முறை! எனது சமூகத்திலேயே அப்படி பல கசப்பான மத மாற்றங்கள் கடந்த 30 வருடங்களில் நடந்து வருகின்றன. அதனால் தான் சொல்கிறேன்! உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் சரிவர பராமரிக்க வேண்டும். 

குறிப்பு: கொசுக் கடியில் இருந்து தப்பிக்க எனது சமூகத்துக்கு கொசு வலை போர்த்திகொள்ள சொல்லி வலியுறுத்துவது என் கடமை! அதையே இங்கு செய்கிறேன்!


நண்பர்களே!

நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கடைபிடிக்க வேண்டியன:

1   உங்கள் மதப் புத்தங்கங்களை அவ்வப்போது படித்துக் காட்டுங்கள்!

2   தினமும்/வாரந்தோறும் கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்!

3   நீங்கள் சார்ந்துள்ள மதத்துக்கு பத்தில் ஒரு பாகமாவது செலவழியுங்கள்!

3   வேற்று மதத்தவரோடு உங்கள் குழந்தைகள் பழகும் போது "ஒரு கண்"           வையுங்கள்!  நடவடிக்கைகளை கண்காணியுங்கள்!

4   அவர்களது கோவில்களுக்கு பிரசார மண்டபங்களுக்கு குழந்தைகளை அனுப்பாதீர்கள்! ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் விழுந்தாலும் அது வீணே! மீண்டும் அது பால் ஆகாது!

5  உங்கள் வீட்டில் நல்லது கெட்டது நிகழ்கையில், அல்லது வீட்டில் யாரேனும் நோய்வாய்ப் படும்போது  "அழையாத விருந்தாளியாய்" வந்து 
ஜெபம் செய்வது, அவர்களது மதப் புத்தகம் வாசிப்பது போன்றவற்றை தயவு செய்து அனுமதியாதீர்கள்! இனிப்பு தடவிய மயக்க மருந்துக்குப் பலியாகாதீர்கள்! உங்கள் குழந்தைகளும் பெற்றோர்களே 'பச்சை கொடி' காட்டிய தைரியத்தில் 'வேறு மார்க்கம்' போய்விடுவதற்கு நீங்களே ஒரு மூல காரணம் ஆகி விடாதீர்கள்!

6  நீங்கள் நீங்களாகவும் மற்ற மதத்தினர் அவர்களாகவே இருக்கட்டும்! ஒரு மல்லிகை ரோஜாவாகவும் மாற வேண்டாம்! அதே போன்று
ஒரு ரோஜா, மல்லிகையாகவும் ஆக வேண்டாம்! அது அதன் இடத்தில் அது-அது இருந்தால் போதும்! 

7  வேற்று மதப் பள்ளிகளில் உங்கள் குழந்தை படிக்கும் போது கவனமாய் இருங்கள்! முன்கூட்டியே உங்கள் குழந்தைகளிடம் 'அவர்கள் அப்படித்தான்!  ஒரே ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு தற்பெருமை பேசுவார்கள்-கண்டு கொள்ளவேண்டாம்-நமக்கு அதைவிட பல ஆயிரம் புத்தகங்கள்/பெருமைகள்/கோவில்கள்/பொக்கிஷங்கள்  உண்டு!" என்று ஒரு வார்த்தை சொல்லி வையுங்கள்! 

8  ஈராயிரம் வருடங்கள் முன்பு கட்டிய ஆயிரக் கணக்கான கோவில்களில் சிலவிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன! அதற்காக நமது சிறப்பு வாய்ந்த கோவில்களை இடித்து விடாதீர்கள்-செப்பனிடுங்கள்! உங்கள் மதத்திலும் அக்கால சூழலுக்கு ஏற்ப சில-பல ஒவ்வாதன சேர்க்கப்பட்டிருக்கலாம்! அதை மட்டும் இக்காலத்தில் முனைந்து களைந்து விடுங்கள்! அதற்காக உங்கள் மதத்தை 'இதோ ஒழிக்கிறேன்' என்று புறப்படாதீர்கள்! நீங்கள் வசிக்கும் வீட்டில் கொசு இருந்தால் கொசு-வர்த்தி கொளுத்தி வையுங்கள்;குடியிருக்கும் வீட்டையே கொளுத்தாதீர்கள்!

9  உங்கள் மொழியை, இனக் கூறுகளை, பண்பாட்டு அடையாளக் குறியீடுகளை, கோவில்களை ஒரு போதும் ஒழித்து விடாதீர்கள்;நாடோடி சமூகம் ஆகி விடாதீர்கள்!

10 உங்கள் மூதாதையர்கள் மற்றும் நீங்கள் பிறந்து வளர்ந்த அந்த சூழ்நிலையை அடையாளக் குறியீடுகளை உங்கள் குழந்தைகளுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் நீங்கள் அப்படியே விட்டுச் செல்லுங்கள்! நாடோடிகள் போலின்றி விழுதுகள் பரப்பும் ஆல மரமாய் தழைத்து பெருகட்டும் உங்கள் குடும்பம்!  

முடிவாக, 
 மத-மாற்றப் பேர்வழிகளிடம் மிக்க கவனமாய் இருங்கள்!
அவர்கள் புதிய புதிய வழி முறைகளைக் கையாளுகிறார்கள்!
புதிய புதிய போர்வைகளில் திரிகிறார்கள்!
இரகசிய திட்டமிட்டுச் செயலாற்றுகிறார்கள்!

எல்லாமே, 
உங்கள் அடையாளங்களை அழிப்பதற்காகத்தான்!
உங்கள் குழந்தைகளைப் பிடிப்பதற்காகத்தான்!

கவனம்-கவனம் தோழர்களே!

yozenbalki

புதன், 14 செப்டம்பர், 2011

கணினி மூலம் வரும் கண் நோய்கள் - ஜாக்கிரதையாய் இருப்பது எப்படி? - Computer Vision Syndrome


உங்கள் கண்களுக்குத்தான் எத்தனை வேலை?
இப்பல்லாம் எனக்குத்தான் எத்தனை தொல்லை..???

 அடப் பாவிங்களா!!
"நவீன உலகில் இன்று நாம் அதிக நேரம் செலவிடும்  
கணினி, செல்பேசி, தொலைக் காட்சி மூலமாக 
நமது கண்களுக்குத்தான் அதிக வேலைத் துன்பம் 
தர ஆரம்பித்து விட்டோம். அத்தோடு தூரம்-வானம்-பறவை என்றெல்லாம் பார்க்க நேரமும்  வாய்ப்புமின்றி 
மனிதக் கண்களுக்கு தூரம் பார்க்கிற 
திறமையும் மங்கி வருகிறது." 


நவீன அறிவியல் நமக்கு பல வசதிகள் தந்துள்ளது.
அத்தோடு சில தீமைகளையும் தான்!

நவீன எந்திரங்கள் நமது கை-கால்களை- உடலை அதிகம் அசைக்கத் தேவை இல்லாத படி செய்து விட்டன. எல்லாமே விரல் அசைவில் கிடைக்கும் அளவுக்கு மனித வேலையை எந்திரங்கள் பலவும் செய்து தந்து விடுகின்றன.

அதனால், தற்காலத்தில் நமது கண்களுக்கு அதிக வேலை பளு உருவாகி விட்டது. சொல்லப் போனால் நமது விரல்களுக்கும்  கண்களுக்கும்தான் இப்போது வேலை என்று சொல்லிவிடலாம். 



If you spend a lot of time each day in front of a computer, you are likely to experience symptoms of computer vision syndrome (CVS)


CVS is a term used to describe a collection of symptoms caused by prolonged computer use. Symptoms appear because the eyes and brain react differently to words on a computer screen than they do to printed text. With more and more adults and children using computers on a daily basis, CVS has become a common vision complication. And an increasing number of people are seeking relief from eyestrain and irritation caused by CVS.

The eyes respond well to most printed material. Most text consists of bold, black letters on a bright, white background. The eyes can easily focus on images with well-defined edges that are strongly contrasted against their backgrounds. However, words and images on a computer screen do not have well-defined edges. Characters displayed on a computer screen are made up of several small dots, or pixels. 

The eyes cannot easily focus on pixels, so they must work harder to see the computer screen clearly. The constant struggle to focus leads to fatigue and tired, burning eyes. Many people try to compensate for uncomfortable vision symptoms by leaning forward or by tipping their head to look through the bottom portion of their glasses. These actions can result in a sore neck, sore shoulders and a sore back.
Symptoms of CVS

People who suffer from CVS may experience the following symptoms:
Dry eyes  - வறண்ட கண்கள் 
Headaches - தலை வலி 
 
Eye irritation - கண் எரிச்சல்
Blurred vision - மங்கலான பார்வை 
Light sensitivity - வெளிச்சம் பார்க்க கண் கூச்சம்
ரொம்ப நேரம் கம்ப்யூட்டர் பார்த்த பின் இது மாதிரி உங்க பார்வை  டபுளா தெரியுதா...???
** Temporary inability to focus 
on a distant object (pseudomyopia) தூரப் பொருள்களை தற்காலிகமாக கூர  இயலாமை 
Double vision - இரட்டையாய் தெரிதல்
Squinting - மாறு கண் பார்வை
Neck and shoulder pain - கழுத்து தோள்பட்டை வலி

Treatment of computer vision syndrome

If you think you might be feeling some of the symptoms of CVS, you may benefit from a pair of computer glasses. Computer glasses are prescription glasses specially designed to allow patients to work comfortably on a computer. Computer work involves focusing the eyes at a close distance. Standard reading glasses are usually not enough to alleviate symptoms of CVS, as computer monitors are usually placed a little further away than the comfortable reading distance. Computer glasses allow a person to easily focus on the distance of the computer screen. Contact lens wearers may even need to wear glasses over their contacts while using the computer.


Coping with computer vision syndrome

If you are having trouble with your eyes while using a computer, 
the following tips are worth a try.
*Consider a pair of computer glasses
*Blink, breathe and break. Blink more often, take frequent deep breaths, 
  and take a short  break every hour
*Use artificial tears for dry or irritated eyes
*Reduce screen glare by adjusting light levels
*Increase font size on your computer screen 



-யோஜென் பால்கி
yozenbalki

Source: www.vision.about.com

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

Acid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது!

உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது.
தற்போதைய அவசர வாழ்க்கையில், வெளியில் சாப்பிடும் உணவு வகைகள் பெரும்பாலும் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. காரணம், அதில் எந்தவிதமான உயிர் சத்தும் இருப்பதில்லை. 

ஒரு பச்சைக் காய்கறியோ, பழமோ, பயறு வகைகளையோ கண்ணில் காணாமலேயே நமது மூன்று வேளை உணவும் முடிந்து விடுகிறது. 

வெறும் காய்ந்து போன வைக்கோலைத் தின்று உயிர் வாழும் கால்நடைகளைப் போல நாம் சத்தில்லாத துரித (fast-food) உணவு வகைகளை வித விதமாகத் தின்று வருகிறோம். என்ன....? கொஞ்சம் வைக்கோலுக்கு வாசனை தடவி மசாலா கலந்து நாக்கை ஏமாற்றி நமது வயிற்றையும் வஞ்சிக்கிறோம்!

விளைவு? நோய்கள் பெருக்கம்!

இங்கே கீழ்க் காணும் முப்பரிமான படத்தைப் பாருங்கள்.
                                             அடிப்புறம் 44% + 32% +18% + 6% சுமார் அளவு. 

இது ஒரு சரிவிகித உணவு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை நான்கு கட்டங்கள் மூலம் உணர்த்துகின்றன. அடிப்புறம்-அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய கார்போ ஹைட்ரேட் துவங்கி மேற்புற கூம்பில் எப்போதாவது எடுத்துக் கொள்ளவேண்டிய கொழுப்பு, எண்ணெய், இனிப்பு வகைகள் வரை சொல்லப் பட்டிருக்கிறது. (நாம் தான் எண்ணையை தினந்தோறும் லிட்டர் லிட்டராக உணவில் பொரிக்க வறுக்க பயன்படுத்தி நமது வயிற்றை ஒரு குப்பைத் தொட்டியாய் ஆக்கிவிடுவோமே!)

இரண்டாம் அடுக்கில் பாருங்கள். காய்கறிகள் பழங்கள் சொல்லப் பட்டு இருப்பதை. நம் தினசரி உணவில் இதுதான் மிக மிக முக்கியமானது. அதிகம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

அதெல்லாம் போக நம் மனித உடலில் உள்ள இரத்தத்தில் இன்றியமையாத
ஒரு காரத் தன்மை காணப் படுகிறது. எனவே நாம் நமது தினசரி உணவில் காரச் சத்து உள்ள உணவு வகைகளான காய்கறிகள் கீரை பழ வகைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும். (காரம் என்பதை "கார சாரமான" என்ற அர்த்தத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது)

நம் இரத்தத்தில் pH அளவு சுமார் 7 முதல்  8 வரை இருப்பின் அது மிகவும் நல்லது ஆகும். அதற்கு கீழும் மேலும் போனால் அது நமக்கு அபாய அறிவிப்பு ஆகும்!

The pH scale is from 0 - 14

சுத்தமான ஒரு குடிநீரின் pH Value (7) ஆகும்! Neither acidic nor Alkaline.

0 1 2 3 4 5 6 7 healthy 8 9 10 11 12 13 14

Human blood pH should be slightly alkaline ( 7.35 - 7.45 ). 
Below or above this range means symptoms and disease.

A pH of 7.0 is neutral. (அமிலமும் அன்று காரமும் அன்று)

pH below 7.0 is acidic. (அமிலம்)

pH above 7.0 is alkaline. 
(காரம்)

pH 7.0 அளவுக்கு கீழே போகப் போக அந்த உணவானது அமிலத் தன்மை அதிகம் கொண்டது -அதிகம் தீங்கு விளைவிப்பது என்று அறிய வேண்டும்.
 
The most common disorder in acid-base homeostasis is acidosis, which means an acid overload in the body, generally defined by pH falling below 7.35 level.
Acidosis- நோய் நிலையின் அறிகுறிகள்-அதன் பாதிப்பு பற்றிய படம்:


உதாரணமாக ஒருவரின் ரத்தத்தில் pH அளவு 6.0 - 6.5 இருந்தால் அவருக்கு கோமா நிலை அல்லது மரணம் கூட ஏற்படலாம் என்கின்றனர்.

அதற்காக அமிலத்தன்மை கொண்ட உணவே கூடாது என்பதல்ல.
உங்கள் வயிற்றில் மொத்த உணவின் அமிலத்தன்மை 40% -க்கு மிகாமல் 
பார்த்துக் கொள்ளுங்கள். 

இன்னும் கேட்டால் 20% அமில உணவு  80% கார (alkaline) உணவு விகிதம் என்றால் இன்னும் நிம்மதி! 

(அதற்காக, காரத் தன்மை pH 7.45 க்கு மேலே போனாலும் Alkalosis என்னும் நோய் நிலை உண்டாகி விடும்-ஜாக்கிரதை!)

அது சரி! எது எதுவெல்லாம் அமில உணவு என்று கேட்கிறீர்களா?

மாமிச உணவு வகைகள், முட்டை, மீன், பருப்பு வகைகள் போன்றவை அமில உணவுகள். மேலும் காண இங்கு கிளிக் செய்க 

அதே போல் கார உணவுகள் என்பன: பெரும்பாலான பழ வகைகள், பச்சை காய் கறிகள் ஆகும். மேலும் காண இங்கு கிளிக் செய்க

To maintain health, the diet should consist of 60% alkaline forming foods and 40% acid forming foods. 

 To restore health, the diet should consist of 80% alkaline forming foods and 20% acid forming foods.

Generally, alkaline forming foods include: most fruits, green vegetables, peas, beans, lentils, spices, herbs and seasonings, and seeds and nuts.

Generally, acid forming foods include: meat, fish, poultry, eggs, grains, and legumes. An acidic body is a sickness magnet.

ஆரோக்கியத்தின் சாவி நாம் தினசரி உண்ணும் உணவில் தான் 
மறைந்து கிடக்கிறது!

நல்லுணவை உண்டு நாம் நலமாய் வாழலாமே!

-யோஜென் பால்கி
yozenbalki

www.yozenmind.com

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அன்னா வென்றார்! தர்மம் வென்றது! Victory of Anna Hazare is Victory of Indian people!


ஊழலுக்கு எதிராகப் போர்க்குரல் உயர்த்தி இந்திய / உலக  சமூகத்தை திரும்பிப் பார்க்க செய்துவிட்டார் அன்னா ஹசாரே அவர்கள் ! 

ஊழலை விரும்பும் அரசியல் வாதிகளின் முகத் திரைகள் இவரால் கிழிந்து போனது. இந்திய இளைஞர்கள் அணி அணியாக திரள ஆரம்பித்து விட்டதைக் கண்டு அதிகார வர்க்கங்கள்  யாவும் இன்று கலங்கிப் போயிருக்கின்றன. இந்திய மக்களுக்கு ஒரு சேதி தெளிவாய்த் தெரிந்து போனது. அது என்னவெனில், ஆளும் கட்சி ஆனாலும் எதிரி/உதிரிக் கட்சிகளானாலும் அவர்களுக்கு ஊழலை ஒழிக்க எள்ளளவும் மனமில்லை என்பதுதான் அது. (கொள்ளையில் குளித்தவர்களுக்கு யோக்கியனாகும் மனம் அவ்வளவு சீக்கிரம் வந்து விடுமா என்ன?)

ஊழலுக்கு எதிராக கால வரை அற்ற உண்ணாவிரதம் துவங்கப் போகிறேன் என்று அன்னா அறிவித்தது துவங்கி பன்னிரண்டாம் நாள் இன்று காலை பத்து மணி வரை நடந்த சேதிகள் நமக்கு உணர்த்துவன:


*  உண்மையை தர்மத்தை யாரும் அழித்து விட முடியாது.

*  தகுந்த தலைவன் ஒருவனின் வருகைக்காக நல்லவர்கள் காத்திருக்கிறார்கள்.

*  இளைஞர்கள் சமூகம் அப்படி ஒன்றும் வரை முறை இன்றி கெட்டுப் போய்விட   இல்லை. தர்ம நியாயங்கள் மீது அவர்களுக்கு வளர்ந்தவர்களை விட அதிக அக்கறை இருக்கிறது. அதை வரலாறும் உணர்த்துகிறது.

* எல்லாக் காலங்களிலும் அதர்மம் சரியான தருணங்களில் வீழ்த்தப் பட்டு இருக்கிறது, உதாரணம்: இட்லர், முசோலினி அழிவு. அவர்களது சந்ததிகள் இன்று என்னவானார்கள்?

*  அதர்மம் 'ஒரு எப்போதும் இருக்கத் துடிக்கும் இருட்டு'. அதை நல்லவர்கள் தான் தர்ம-தீபம் கொண்டு தொடர்ந்து எரித்து விலக்க வேண்டியிருக்கிறது.

*   அன்னா ஹசரேவின் எளிமை, உண்மை, உள்ள உறுதி இவற்றைக்  கொண்ட எவரையும் இந்த உலகம் மனதார விரும்புகிறது. காந்திஜி எப்படி உலக மக்கள் மனதை வென்றார் என்பது இந்த எளிய காந்தியவாதியின் அணுகு முறையில் இருந்தே புரிகிறது.
(அன்னாவுக்கு என்னவொரு புன்னகை பூத்த முகம்? ஆனால், எவ்வளவு விடாப் பிடியான கொள்கை உறுதி...தெளிவான வேலைத் திட்டங்கள்...எதிரியின் யுத்த தந்திரங்களை முன்கூட்டியே அறிந்து முறியடிக்கும் சாதுர்யம்...முத்தான படை வீரர்கள். கேஜ்ரிவால், கிரண் பேடி, சாந்தி பூஷன் இவர்களை எல்லாம் என்ன பாராட்டினாலும் தகும்.)

*  இதில் ஊழல் விரும்புவோர்களின் இலட்சணங்களும் வெளிப்படையாகத் தெரிந்து போய் விட்டது. பல்வேறு போர்வைகளில் அவர்கள் வெளிவந்து அன்னா-குழுவினரை விமரிசனம் செய்து திட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தனர்; தமது பிழைப்பு போய்விடுமே என்று. அவர்கள் தெருமுனை துவங்கி பாராளுமன்ற அமைச்சர் வரை பரவி இருந்ததைப் பார்க்க முடிந்தது.
(அது போன்ற ஜந்துக்களை நான் Twitter-இல் நசுக்கி நாறடித்தது தனிக் கதை)

* அன்னா குழுவினரை எதிர்த்தவர்கள் நான்கு ரகம்:
   
 1. குறுக்கு வழியில் உயர்ந்தவர்கள்/ உயரக் காத்திருப்பவர்கள்.
     இதில் பச்சைப் பாமரன் முதல் அமைச்சர்கள் வரை அடக்கம்.
    
 2.  பொறாமை கொண்டவர்கள் / புகழாசைப் பிடித்தவர்கள். 
(ஆம்! அன்னா குறுகிய காலத்திலேயே அடைந்த புகழை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சுப்பிரமணிய சாமி போன்றவர்களின் எழுத்து செயல் அதைப் பிரதி பலித்தது.)

3. ற்பெருமை கொண்டவர்கள்: அதாவது தாம் அதிகம் படித்த அதி மேதாவிகள், அரிய குலப் பெருமை, குடிப் பெருமை கொண்டவர்கள் என்றும் ஆனால் அன்னா ஒரு படிக்காத கிராம வாசி என்றும் முகம் சுளித்தவர்கள்.

4. பெருந்தன்மை இல்லாத 'சித்தாந்த சிறை-வாசிகள் :
இவர்களுக்கு ஒருவரின் நோக்கங்களை விட அவர் அணிந்திருக்கும் பிற அணிகலன்கள் முக்கியமானவை. உதாரணமாக அன்னா அணிந்திருக்கும் காந்தி குல்லாய்! அது போதாதா இவர்களை கொதிப்பேற்ற?
வீதியில் காயம்பட்டு துடிக்கும் தனது குழந்தைக்கு காந்தி குல்லாய் போட்ட ஒருவன் முதல் உதவி சிகிச்சை செய்தால் கூட இவர்கள் வேண்டாம் என்று கூட சொல்லிவிடுவார்கள். அத்தனை ஒரு சித்தாந்த சிறை வாசிகள்! 
இது போன்ற வித விதமான சித்தாந்த கூடாரங்களில் அறிஞர்கள் கூட அடைபட்டுக் கிடக்கின்றனர். ஆளாளுக்கு ஒரு வேலை செய்தால் இந்த மனித தோட்டத்தில் வித விதமான நறுமண மலர்கள் பூக்காதா? ஒரே ஒருவன் மட்டும்உழைத்து ஒரே ஒரு பூ மட்டும் பூத்தால் போதுமா?

அன்னா-குழுவினரை எதிர்க்க அவர்கள் பயன் படுத்திய சொத்தை ஆயுதங்கள் இதோ:

1. "Civil Society" என்பது பாராளுமன்றத்தை விட உயர்ந்தது அல்ல. பாராளு மன்றத்தை வெளியில் இருந்து யாரும் நிர்ப்பந்தம் செய்யவே கூடாது-நீதித் துறை உட்பட". 

எனது பதில்: * அப்படியானால் 150-க்கும் மேலான கிரிமினல் குற்றவாளிகளை உள்ளடக்கிய பாராளுமன்றத்தில் இருந்தவாறு உங்களை காப்பாற்றிக் கொள்ள நீங்களே போட்டுக் கொள்ளும் சட்டங்களை மக்கள் மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்? 
* வோட்டு போட்டு அனுப்பிய மக்களை விட பாராளுமன்றம் உயர்ந்ததா?
* civil society- என்பது எதிரி நாட்டின் ஒற்றர் படையா என்ன? அது இந்திய மக்களின் மன சாட்சியல்லவா? 

2. "Janlokpal" - சட்டத்தின் கீழ் பிரதமரை விசாரிக்கக் கூடாது. அவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர். அது இந்திய இறையாண்மையைக் கெடுத்துவிடும்".

என் பதில்: மடியில் கனம் இல்லாதவனுக்குப் பயம் எதற்கு? தானாக முன் வந்தல்லவா 'என்னை தாரளமாக சோதித்துக் கொள் ' என்று சொல்ல வேண்டும். பயப்படுபவர்கள் ஏதோ பெரிதாகவே தப்பு செய்திருக்க வேண்டும்.
திருட்டுப் போன ஒரு கிராமத்தில் காவலர்கள் வந்து சோதிக்கும் போது கிராம அதிகாரி மட்டும் தன் வீட்டை மட்டும் சோதனையிடுவதில் இருந்து விலக்கு வேண்டும் என்று கேட்பது ஏனாம்? 
தவறு செய்யும் அரசனையே இங்கு தூக்கில் போடலாம் என்ற பயம் இருந்தால்தானே ஒரு நாடு உருப்படும்? 

எப்படியோ, ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் போன்றவற்றில் இலட்சம் கோடிகளில் செய்த ஊழல்கள் வெளிவந்த கோபத்தில் இந்திய மக்கள் இருக்கிறார்கள். உலக மக்களும் இந்திய அரசியல்வாதிகளைப் பார்த்து காறிக் காறி உமிழ்கிறார்கள். சுவிஸ் வங்கிக் கணக்குகள் முழுதும் வெளி வரும் என்ற நம்பிக்கை எனக்கு துளிகூட கிடையாது. திருடர்களுக்காக கட்டப் பட்ட அமைப்புகளில் இருந்து திருடர்களுக்கு எதிரான செயல்கள் நடக்கும் என்று நம்புவது அறிவீனம் ஆகும்!

ஏதோ சில கண்துடைப்பு பணிகள் இங்கும் அதுபோல் அங்கும் நடை பெறக் கூடும். ஆனால் என்னவொரு மகிழ்ச்சி என்றால், Janlokpal- என்ற அஸ்திரம் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைவரையும் பயமுறுத்தும். அதனால் ஒரு 60-70% ஊழல்கள் நிச்சயம் குறையும். "மந்திரி ஒருத்தனே உள்ள போயிட்டான்-கொள்ளையடிச்ச சொத்தையும் புடிங்கிட்டாங்க" என்று பாமரன் ஒருவன் பேசும் வரை ஊழல்கள் குதித்து விளையாடும்தானே?

3. "தை விட வேறு எத்தனையோ முக்கிய வேலைகள் நாட்டில் இருக்க அன்னாவுக்கு வேறு வேலைகள் இல்லையா?" என்று சிலர் கேட்கின்றனர்: 

என் பதில்: வேறு வேலைகளை நீதான் கவனியேன்!
எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறதா என்ன? வெறும் பேச்சு-எதிலும் குறை காண்பது என்பது தவிர இந்த Critics-கள் செய்து கிழித்தது தான் என்ன? கட்டிய வீட்டை குறை சொல்லும் நாடோடிகளின் கதைதானே இவர்கள் கதை? 
இருந்த இடத்தை விட்டு அசையாமல் 'உருவாக்கியதை' குறை கூறுவது தானே  இவர்கள் வேலை? இவர்கள் வாழ்வு முழுவதும் ஒரு சின்ன Constructive- ஆன காரியத்தையும் செய்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்! 

மேலும், ஒரு வீட்டில் கொசுவை ஒழிப்பது மட்டும்தான் ஒரே வேலை என்று எவரும் இங்கு அழுகுணி வாதம் செய்யவே இல்லை. அன்னா கொசுக்களை ஒழிக்க 'முயற்சிக்கிறார்' (கவனியுங்கள்: முயற்சிக்கிறார்!). நீங்கள் மூட்டைப் பூச்சிகளையோ ஈககளையோ ஒழிக்க முன்வருவதை யார் தடுத்தார்கள்?
ஒருவர் வீட்டுக்கு வெள்ளையடியுங்கள், இன்னொருவர் சுகாதாரம் பேணுங்கள், எலி ஒழிக்க திட்டமிடுங்கள், வீட்டில் நாட்டில் உங்களால் முடிந்த ஆயிரம் நல்ல காரியங்கள் செய்து நல்ல பேர் எடுங்களேன்! யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே!
முயற்சியுங்கள்-கையை காலை ஆட்டி ஏதாவது செய்யுங்கள்!
ஆனால், தான் எதுவும் செய்யாமல் யாரோ முன்வந்து பாரம் சுமந்து செய்கிற செயலைக் குறை சொல்லும் அற்பத் தனத்தை என்னென்பது?

எப்படியானாலும், உலகம் தோன்றிய காலம் தொட்டு இது போன்ற தடைகளைத் தாண்டித்தான் மனித சமூகத்தின் நாகரிகம் வளர்ந்து வந்துள்ளது. இருட்டை விலக்க அவ்வப்போது ஒரு பெரும் விடிவெள்ளி அல்லது ஒரு கைவிளக்கு தோன்ற வேண்டி இருக்கிறது. அந்த வகையில் அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லும் அன்னா-குழுவினரை என்ன பாராட்டினாலும் அது மிகவும் குறைவே ஆகும்!

அர்பணிப்பு மிக்க அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர், அனைத்து ஆதரவாளர்கள், தியாக உள்ளம் கொண்ட இந்திய இளைஞர்கள்-இளைஞிகள் அனைவரையும் இந்தச் சமயத்தில் நான் வாழ்த்துகிறேன்-வணங்குகிறேன்!

தர்மமே என்றும் வெல்லும்!

-யோஜென் பால்கி
yozenbalki



                                                                       Anna Hazare...on ending his 12 days fast.
                                                                             28th Aug 2011 at about 10 am.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

"என்னிடம் மந்திரக்கோல் இல்லை" என்று சொல்லும் மன்மோகன் - I have No Magic wand!!!



சில நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 15-இல் செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை  ஏற்றி வைத்துவிட்டு  நம்ம பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்:


இனி நீங்களும் கீழ்க் கண்ட துறைகளில் பணியாற்றினால் கஷ்டப் பட்டு எதற்கும் மெனக்கெட வேண்டாம் இப்படிச் சொல்லுங்கள் அது போதும் :

"திருட்டை ஒழிக்க எங்களிடம் எந்தவிதமான  மந்திரக் கோலும் இல்லை" - காவல் துறை 

" எழுத்தறிவின்மையை ஒழிக்க எந்தவிதமான மந்திரக்கோலும் இல்லை"
 - கல்வித் துறை

" குடிநீர் தட்டுபாட்டை ஒழிக்க.....இல்லை" - குடிநீர் வாரியம் 

" மின்தட்டுப் பாட்டை ஒழிக்க.....இல்லை" - மின்சார வாரியம்

" வேலையின்மையை ஒழிக்க ..... இல்லை" - வேலை வாய்ப்புத் துறை

"குண்டும் குழியுமான மண் சாலைகளை ஒழிக்க......இல்லை" 
- நெடுஞ்சாலைத் துறை 

" நோய்களை ஒழிக்க எந்த விதமான மந்திரக் கோலும் இல்லை"
- சுகாதாரத் துறை

அவ்வளவு ஏன்?

நீங்கள் மாணவராய் இருந்தால் உங்கள் பெற்றோரிடம் இப்படிச்
சொல்லுங்கள்:
" அதிக மதிப்பெண்கள் பெற என்னிடம் எந்தவிதமான மந்திரக் கோலும் இல்லை".

ஒரு கணவராய் இருந்தால் உங்கள் மனைவியிடம் இப்படிச் சொல்லுங்கள்:
" இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள என்னிடம் எந்த விதமான மந்திரக் கோலும் இல்லை".

ஒரு நிறுவனத்தில் பணியாற்றினால் உங்கள் அதிகாரியிடம் இப்படிச் சொல்லுங்கள்: 
"இதைவிட நன்றாக வேலை பார்க்க என்னிடம் எந்த விதமான மந்திரக் கோலும் இல்லை"

இப்படிப்பட்ட ஒரு அருமையான பொன்மொழியை சொல்லித்தந்த "மண்ணு"
வாழ்க-வாழ்க! 

எப்படியோ நாடு நாசமாய்ப் போய் 
பேய்கள் அரசாளட்டும்!

(பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்...என்பார்கள்.
தரும நியாயம் எதுவும் பார்க்காமல் வெறும் சட்டம்/புள்ளி விவரம் மட்டும் பேசும் பேய்கள் இருந்தால் எந்த நாடும் உருப்படாது!)